Search This Blog

Wednesday, September 05, 2007

பிலால் குற்றம் செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்

ஐதராபாத் போலீஸ் தேடும் குற்றவாளி பிலால் குற்றம் செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்
தந்தை உருக்கம்
ஐதராபாத், செப்.5: ஐதராபாத் தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான பிலால் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், பிலால் ஓர் அப்பாவி என்றும் அவன் எங்கிருக்கிறான் என்பது பற்றியும் எங்களுக்கு 3 ஆண்டுகளாகத் தெரியாது என்று அவனது தந்தை அப்துல் வாஷத் உருக்கமாகக் கூறுகிறார்.ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக இந்நகரைச் சேர்ந்த பிலால் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால், பிலால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கிறான். வங்கதேசத்தில் பதுங்கியிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.ஆனால், இதை பிலாலின் தந்தை மறுக்கிறார். ஐதராபாத்தில் மூசரம்பாக் பகுதியில் வசிக்கிறார் பிலாலின் தந்தை அப்துல் வாஷத், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு பிலாலையும் சேர்த்து 7 மகன்கள், 4 மகள்கள். பிலாலின் நான்கு அண்ணன்களும் துபாயில் பணியாற்றுகின்றனர். சகோதரிகள் 4 பேருக்கும் திருமணமாகிவிட்டது. 5வது மகனான பிலால், கடந்த 2004ம் ஆண்டில் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது காணாமல் போய்விட்டான். அவன் எங்கிருக்கிறான் என்ற விவரம், அவனது குடும்பத்துக்கு தெரியவில்லை. இந்நிலையில் பிலாலை போலீஸ் தேடி வருவது பற்றி அவனது தந்தை அப்துல் வாஷத் கூறியதாவது:எனது மகன் பெயர் முகமது ஷாகித். பிலால் என்பது போலீஸ் வைத்த பெயர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன என் மகன் எங்கிருக்கிறான் என்று எனக்கு மட்டுமில்லை, எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. அவன் மிகவும் தயக்க குணம் கொண்டவன். அதிர்ந்து பேசமாட்டான். அவன் ஒரு போதும் தீவிரவாதியாக இருக்க மாட்டான். அவன் மீதுள்ள குற்றங்கள் நிருபணமானால் அவனை தூக்கில் போடட்டும். விசாரணை என்ற பெ யரில் போலீசார் எங்களை துன்புறுத்துகின்றனர். இவ்வாறு அப்துல் வாஷத் கூறினார். பெங்களூர் தாக்குதலிலும் தொடர்பு: இதற்கிடையில் கடந்த 2005ம் ஆண்டு பெங்களூரில் விஞ்ஞானிகள் மாநாட்டில் நடந்த தாக்குதலுக்கும், ஐதராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்புக்கும் பிலால்தான் காரணம் என்று கர்நாடக போலீசார் கூறியுள்ளனர்.

Parliament attack case: Supreme Court notice to Delhi Government

Parliament attack case: Supreme Court notice to Delhi Government
Legal Correspondent
Shaukat Hussain Guru files petition seeking his release
New Delhi: The Supreme Court on Monday issued notice to the Delhi Government on a petition filed by Shaukat Hussain Guru, convicted and sentenced to undergo 10 years’ imprisonment in the Parliament attack case, seeking a direction for his release forthwith.
A Bench of Justices P.P. Naolekar and R.V. Raveendran issued the notice after hearing senior counsel Shanthi Bhushan appearing for the petitioner, Guru. The trial court in December 2002 had awarded death sentence to him and on appeal, the Delhi High Court confirmed the death penalty.
On appeal, the apex court reduced it to 10 years’ imprisonment.
The apex court dismissed his review petition in April 2006 and the curative petition in January this year. The present habeas corpus petition has been filed after exhausting all the remedies available to him.
In his writ petition, Guru submitted that he was convicted by the apex court by drawing an inference from the circumstances that he had knowledge of the conspiracy and the plan to attack Parliament House and yet he failed to give information to the nearest Magistrate or police officer of such intention.
He said that he was not given any opportunity to defend himself by leading evidence to show that he had complied with the requirement of Section 39 Cr.P.C. by informing a police officer who had not taken him seriously.
He said that it was a well-established principle of criminal law in this country that before a person was convicted of a crime, he had to be given an opportunity to defend himself against that allegation by framing a charge of that offence and thereafter giving him an opportunity to defend himself by producing the evidence.
Contending that no opportunity was given to lead evidence that he had in fact informed the police officer, he said that his conviction and 10 years’ imprisonment was clearly in contravention of the principles of natural justice and in contravention of Article 21 of the Constitution (right to life and liberty).
He said that he had been kept in custody illegally and was therefore entitled to be released after recording a finding that his continued detention was in violation of Article 21 of the Constitution.

தென்காசியில் கலவரத்தை தடுக்க தனி போலீஸ் படை அமைப்பு

தென்காசியில் கலவரத்தை தடுக்க தனி போலீஸ் படை அமைப்பு

தென்காசி :தென்காசியில் கலவரத்தை தடுக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.தென்காசியில் கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் 2ம் தேதி த.மு.மு.க. மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தாக்கப்பட்டார். இந்த இரு சம்பவங்களை தொடர்ந்தும் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய வழக்குகளில் சிக்கியவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 14ம் தேதி தென்காசி கூலக்கடை பஜாரில் இரு பிரிவினரும் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டனர். சிலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து நகரில் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட 29 பேர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
கடந்த 3ம் தேதி தென்காசிவட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் வெடிகுண்டு புரளி என தெரிந்தது. அன்று இரவு எஸ்.பி.ஸ்ரீதர் தென்காசிக்கு வந்து போலீசாரின் வாகன சோதனை, கண்காணிப்பு பணியை ஆய்வு செய்தார்.இந்நிலையில் நகரில் அமைதி தொடர்ந்திடவும், இனி இதுபோன்ற வன்முறை, கலவரங்கள் ஏற்படாமல் தடுக்கவும் தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. இப்படையில் சப்இன்ஸ்பெக்டர்கள் பீமராஜன், சாகுல்கமீது மற்றும் 7 ஏட்டுகள் உள்ளனர். இவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sunday, September 02, 2007

TMMK threatens stir

TMMK threatens stir

Special CorrespondentCHENNAI: The Tamil Nadu Muslim Munnetra Kazhagam has threatened to launch a series of agitations if the State Government did not issue an order providing for separate quota for Muslims in employment and education by December 31.
A resolution at the party's general council meeting in Papanasam on Sunday said the Government should implement the Justice Janardhanam Committee recommendation, which suggested that reservation for Muslims could be made without affecting the pending Supreme Court case against 69 per cent reservation. The Chief Minister also mentioned the recommendation in the Assembly.
The meeting also urged the Centre to bring in a legislation based on the recommendations of the Sachar Committee and Renganath Misra Committee.

Tuesday, August 14, 2007

தென்காசியில் திடீர் கலவரம்

தென்காசியில் திடீர் கலவரம் ; 6 பேர் படுகொலை கடைகள் அடைப்பு-பதட்டம்
தென்காசி, ஆக. 14-
இன்று காலை 10 மணிக்கு நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து ஒரு முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை வெட்டி கொன்றனர்.
இதனால் இரு தரப்பினரிடையேயும் மோதல் போக்கு உருவானது. அவ்வப் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.
இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.
அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இறங்கிய இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்க வில்லை.
இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கர மோதலால் அப்பகுதி போர்க்களம்போல் காணப்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளிïர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தென்காசி சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பகுதியிலும் பதட்ட மான சூழ்நிலை உரு வானது. அங்கும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Six C's of Character - Yasir Fazaga