சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி ஆனார் விஜயக்குமார் ஜூலை 29, 2007 சென்னை: வீரப்பனை வேட்டையாடிய சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் கூடுதல் டிஜிபி விஜயக்குமார், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடிய சிறப்பு அதிரடிப்படைக்குத் தலைவராக இருந்தார் கூடுதல் டிஜிபி விஜயக்குமார். வீரப்பன் வதத்திற்குப் பின்னர் சென்னை சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் தேனி மாவட்டத்தில் புதிதாக முளைத்துள்ள நக்சலைட்டுகளை வேட்டையாடும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக விஜயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மீண்டும் சென்னைக்குத் திரும்புகிறார் விஜயக்குமார். இதுவரை இப்பதவியில் இருந்து வந்த கே.வி.எஸ். மூர்த்தி ஓய்வு பெறுகிறார். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஏற்கனவே விஜயக்குமார் பணியாற்றியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இதுதவிர மேலும் சிலரும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை ஆயுதப் படை ஐஜி ஜே.கே.திரிபாதி சென்னை மத்தியக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படை ஐஜியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கமாண்டோ படை எஸ்.பி. ஸ்ரீதர், நெல்லை எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். நெல்லை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன், வேலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளி கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார். நாமக்கல் எஸ்.பி. தீபக் தாமோதர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. ஜான் நிக்கல்சன், மண்டபம் கடலோர பாதுகாப்புப் படைப் பிரிவின் 12வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Search This Blog
Sunday, July 29, 2007
Thursday, July 26, 2007
மேலப்பாளையம் கொலை வழக்கு: அல்- உம்மா தீவிரவாதிகள் 7 பேர் விடுதலை
மேலப்பாளையம் கொலை வழக்கு: அல்- உம்மா தீவிரவாதிகள் 7 பேர் விடுதலை நெல்லை, ஜுலை. 26-
மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சாதலி. இவர் இப்பகுதியில் உள்ள அல்-உம்மா தீவிரவாதிகள் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறப் படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் கடந்த 2004-ம் ஆண்டில் மேலப்பாளையம் பகுதியில் சாதலியை வெட்டி கொலை செய்தது.
7 பேர் மீது வழக்கு
இதுகுறித்து மேலப்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்த கோழி அலியார், கொத்தனார் அலி, ஷாலின், ரோஷன், மண்எண்ணை பஷீர், ïனுஸ், முல்லன் சையதுஅலி ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விடுதலை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கொலைக்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கு தொடரப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சேஷையா தீர்ப்பளித்தார். இந்த கொலை வழக்கில் சிக்கியிருந்த மண்எண்ணை பஷீர் மீது வெடிகுண்டு வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சாதலி. இவர் இப்பகுதியில் உள்ள அல்-உம்மா தீவிரவாதிகள் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறப் படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் கடந்த 2004-ம் ஆண்டில் மேலப்பாளையம் பகுதியில் சாதலியை வெட்டி கொலை செய்தது.
7 பேர் மீது வழக்கு
இதுகுறித்து மேலப்பாளை யம் போலீசார் வழக்கு பதிவு செய்து அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்த கோழி அலியார், கொத்தனார் அலி, ஷாலின், ரோஷன், மண்எண்ணை பஷீர், ïனுஸ், முல்லன் சையதுஅலி ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. விடுதலை
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கொலைக்கான ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கு தொடரப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சேஷையா தீர்ப்பளித்தார். இந்த கொலை வழக்கில் சிக்கியிருந்த மண்எண்ணை பஷீர் மீது வெடிகுண்டு வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
Tuesday, July 24, 2007
பிரதிபா பாட்டீல் அம்மையார்.
முஸ்லிம்களின் வரலாற்றை தவறாகப் புரிந்து கொண்ட,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த - பார்ப்பன எதிர்ப்பு கொள்கைக் குடும்ப கட்டமைப்பைக் கொண்ட,தேர்தல்களில் போட்டியிட்ட போதெல்லாம் வெற்றிக்கனிகளையே பறித்த பிரதிபா பாட்டீல் அம்மையார்.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்களும் செய்யப்பட்டு விட்டன.
1947-ல் அந்நிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீண்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை அலங்க(hரப்பதவிக்கு)ரிக்க இப்போது நாட்டை ஆளும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு இன்ஷா அல்லாஹ் ஒரு பெண் தேர்தெடுக்கப்படவிருக்கிறார்.
சமீபத்தில் முஸ்லிம் பெண்களின் முக்காடு விசயத்தில் கருத்துக் கூறி ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கண்டனக்கணைகளை சந்தித்த பிரதிபா பட்டீல் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பார்ப்பன எதிர்ப்பு கொள்கைகளைக் கொண்ட குடும்ப கட்டமைப்பைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது முஸ்லிம்களின் வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது.
பெண்களின் பாதுகாப்புக் கவசமாகவும் கண்ணியமான உடையாகவும் திகழும் (புர்கா) முக்காடு விசயத்தில் கருத்துக் கூறி ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அதிருப்தியை சம்பாத்தித்துக் கொண்ட பிரதிபா அம்மையாரின் கடந்த கால வரலாறு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
அவரைப்பற்றிய சுருக்கமான ஆய்வுக்கட்டுரை
மகாராஷ்ரா - ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19ம் தேதி பிறந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிபா பட்டீல் சோலங்கி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவர் எம்.ஏ., எல்.எல்.பி., பட்டம் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பதவியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் சுமார் 90 கோடிக்கு மேல் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினராகும்.
மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்கோயன் எனும் ஊரில் வழக்குறைஞர் தொழில் செய்து வந்துள்ளார். அங்கு கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில பொறியியல் கல்லூரியை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். பார்வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார்.
கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார் பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டெல்லியில் தனி விடுதிகளையும் நடத்துகிறார்.
பள்ளி, கல்லூரியில் பயிலும் பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாடில், 1962ல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாகவும் இருந்துள்ளார்.
1966-ல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டவர். இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மையம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியையும் பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.
அமராவதியில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு 1890களில் நடந்த பொழுது அதற்குத் தலைமை தாங்கியவர், சர்.சங்கரன் நாயர். பின்பு அதிலிருந்து விலகினார். 1921-22ல் காந்தியாரிடம் அவர் கள்ளுக்கடை மறியலை நிறுத்தக் கோரினார். அதற்குக் காந்தியார், மறியலை நிறுத்துவது தம் கையில் இல்லை என்றும், ஈரோட்டுப் பெண்கள் இருவர் (பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மையார்) கையில் இருக்கிறது என்றும் பதில் கூறினார். முன்பு மத்திய மாகாணத்தில் இருந்த இதே அமராவதியில்தான், இரண்டாவது அகில இந்திய பார்ப்பனர் அல்லாதவர் மாநாடு, பானகல் அரசர் தலைமையில் 1925ல் நடைபெற்றது. (முதல் மாநாடு 1924ல் சர் ஏ. ராமசாமி முதலியார் தலைமையில் பெல்காமில் நடந்தது) மாளவியா, ராஜகோபாலாச்-சாரி, மோதிலால் நேரு ஆகியோர் இந்த மாநாடுகள் தொடர்வதை விரும்பாமல், காந்தியார் மூலம் வல்லபாய் படேலைத் தூது அனுப்பி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் இந்திய அளவில் பரவாமல் தடுத்து விட்டனர்.
இந்தச் சூழலில், பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்கு பெற்றதாக இருக்கவில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாடில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர். திவான் பகதூர் தோங்கர்சிங் பாடில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேவுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார்.
இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு கொண்டவர் என்பதும், பார்ப்பனியத்தை மறுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு 'மிக நெருக்கமாக' இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.
இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாடிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டியுள்ளார், பிரதிபா பாடில்.
மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சி, வீட்டமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள், பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணியாற்றியவர். துணை அமைச்சராக முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர். காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றியவர்.
மகாராஷ்டிர முதலமைச்சராக சரத்பவார், 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா 1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலகட்டத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும்.
1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை, மக்களவை ஆகியவற்றுக்கு போட்டியிட்டபோதெல்லாம் வெற்றிக்கனிகளையே பறித்தவர் பிரதிபா அம்மையார்.
மக்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிரமாகப் பாடுபட்டவர்.
2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுனராக நியமித்தது.
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் வேட்பாளராக ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்த பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்களும் செய்யப்பட்டு விட்டன.
1947-ல் அந்நிய ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீண்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன் முறையாக இந்தியத் திருநாட்டின் குடியரசுத் தலைவர் பதவியை அலங்க(hரப்பதவிக்கு)ரிக்க இப்போது நாட்டை ஆளும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவோடு இன்ஷா அல்லாஹ் ஒரு பெண் தேர்தெடுக்கப்படவிருக்கிறார்.
சமீபத்தில் முஸ்லிம் பெண்களின் முக்காடு விசயத்தில் கருத்துக் கூறி ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கண்டனக்கணைகளை சந்தித்த பிரதிபா பட்டீல் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பார்ப்பன எதிர்ப்பு கொள்கைகளைக் கொண்ட குடும்ப கட்டமைப்பைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது முஸ்லிம்களின் வரலாற்றை சரியாக தெரிந்து கொள்ளாமல் அல்லது தவறாக புரிந்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது.
பெண்களின் பாதுகாப்புக் கவசமாகவும் கண்ணியமான உடையாகவும் திகழும் (புர்கா) முக்காடு விசயத்தில் கருத்துக் கூறி ஒட்டுமொத்த முஸ்லிம்களின் அதிருப்தியை சம்பாத்தித்துக் கொண்ட பிரதிபா அம்மையாரின் கடந்த கால வரலாறு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
அவரைப்பற்றிய சுருக்கமான ஆய்வுக்கட்டுரை
மகாராஷ்ரா - ஜல்காவோன் மாவட்டத்தில் 1934 டிசம்பர் 19ம் தேதி பிறந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிபா பட்டீல் சோலங்கி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இவர் எம்.ஏ., எல்.எல்.பி., பட்டம் பெற்றுள்ளார்.
இதற்கு முன் இருந்த 11 குடியரசுத் தலைவர்களில் ஒவ்வொரு முறை மட்டுமே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் அப்பதவியை வகித்துள்ளனர்; 110 கோடியுள்ள இந்திய மக்களில் சுமார் 90 கோடிக்கு மேல் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினராகும்.
மகாராஷ்டிராவின் வடக்கில் உள்ள ஜல்கோயன் எனும் ஊரில் வழக்குறைஞர் தொழில் செய்து வந்துள்ளார். அங்கு கிராமத்து மாணவர்களுக்குப் பயன்தரும் வகையில பொறியியல் கல்லூரியை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். பார்வையற்றோருக்கு அந்நகரில் தொழில் பயிற்சி பள்ளியையும், ஏழை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்குப் பள்ளி ஒன்றையும் நடத்திவருகிறார்.
கிராமியப் பொருளாதார மேம்பாட்டிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் தனி அக்கறை செலுத்துகிறார் பெண்கள் கூட்டுறவு வங்கியை ஜல்கோயன் நகரில் உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு என மும்பை, மற்றும் டெல்லியில் தனி விடுதிகளையும் நடத்துகிறார்.
பள்ளி, கல்லூரியில் பயிலும் பொழுது விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்ற பிரதிபா பாடில், 1962ல் சீன ஆக்கிரமிப்பின்போது துணைக் காவல் படையின் தளபதியாகவும் இருந்துள்ளார்.
1966-ல் டாக்டர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் எனும் வேதியியல் பேராசிரியரை, ஜாதி மறுப்பு மணம் செய்து கொண்டவர். இது பெற்றோர் ஏற்பாட்டில் நடந்த திருமணம். ஒரு மகனும் மகளும் இவர்களுக்குப் பிள்ளைகள். தேவிசிங் ஷெகாவத், வித்யபாரதி மகாவித்யாலயா எனும் கல்வி நிறுவனத்தை, மகாராஷ்டிரத்தின் வடகிழக்கில் விதர்பா பகுதியைச் சேர்ந்த அமராவதி நகரில் நடத்துகிறார். அதே நகரில் உழவர் அறிவியல் மையம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு மழலையர் (நர்சரி) பள்ளியையும் பிரதிபா அம்மையார் நடத்துகிறார்.
அமராவதியில் அகில இந்தியக் காங்கிரஸ் மாநாடு 1890களில் நடந்த பொழுது அதற்குத் தலைமை தாங்கியவர், சர்.சங்கரன் நாயர். பின்பு அதிலிருந்து விலகினார். 1921-22ல் காந்தியாரிடம் அவர் கள்ளுக்கடை மறியலை நிறுத்தக் கோரினார். அதற்குக் காந்தியார், மறியலை நிறுத்துவது தம் கையில் இல்லை என்றும், ஈரோட்டுப் பெண்கள் இருவர் (பெரியாரின் துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மையார்) கையில் இருக்கிறது என்றும் பதில் கூறினார். முன்பு மத்திய மாகாணத்தில் இருந்த இதே அமராவதியில்தான், இரண்டாவது அகில இந்திய பார்ப்பனர் அல்லாதவர் மாநாடு, பானகல் அரசர் தலைமையில் 1925ல் நடைபெற்றது. (முதல் மாநாடு 1924ல் சர் ஏ. ராமசாமி முதலியார் தலைமையில் பெல்காமில் நடந்தது) மாளவியா, ராஜகோபாலாச்-சாரி, மோதிலால் நேரு ஆகியோர் இந்த மாநாடுகள் தொடர்வதை விரும்பாமல், காந்தியார் மூலம் வல்லபாய் படேலைத் தூது அனுப்பி, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் இந்திய அளவில் பரவாமல் தடுத்து விட்டனர்.
இந்தச் சூழலில், பிரதிபா அம்மையாரின் துணைவர் தேவிசிங் கூறும் செய்தி ஒன்று கவனத்தில் கொள்ளத்தக்கது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விதர்பா பகுதியில் குடியேறியுள்ள அவர் குடும்பம், மகாராஷ்டிர அரசியலில் செல்வாக்கு பெற்றதாக இருக்கவில்லை. ஆனால், அவருடைய துணைவியாரின் (பிரதிபாவின்) பெரிய தந்தையார் வழக்கறிஞராகவும், அப்பொழுதைய பம்பாய் மாகாண சட்டப் பேரவையின் உறுப்பினராகவும் இருந்த, தோங்கர்சிங் பாடில் ஆவார். அவர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திவான் பகதூர் விருது பெற்றவர். திவான் பகதூர் தோங்கர்சிங் பாடில், சிவசேனாவின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேயின் தந்தை பிரபோதன் தாக்கரேவுக்கு மிக நெருங்கியவர் எனத் தெரிவிக்கிறார்.
இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பிரபோதன் தாக்கரே பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தில் மிக ஈடுபாடு கொண்டவர் என்பதும், பார்ப்பனியத்தை மறுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு 'மிக நெருக்கமாக' இருந்த பிரதிபாவின் பெரிய தந்தையார் பார்ப்பனர் அல்லாதவர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரியவருகிறது.
இன்னொரு முக்கியச் செய்தியை, பிரதிபா பாடிலின் துணைவர் தருகிறார். மண்டல் ஆணையம் நிறைவேற்ற ஆணை வந்த பொழுது, மகாராஷ்டிரத்தில் கலவரத்தைத் தூண்டப் பெரு முயற்சி நடந்தது. ஆனால், நாக்பூரில் கூடிய மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் சுமார் மூன்று மணி நேரம் புள்ளி விவரங்களுடன் பேசி அக்கலவர முயற்சியை முறியடித்து, அமைதியை நிலை நாட்டியுள்ளார், பிரதிபா பாடில்.
மகாராஷ்டிர சட்டப் பேரவை உறுப்பினராக 1962 முதல் 1985 வரை பதவி வகித்துள்ளார். நகர்ப்புற வளர்ச்சி, வீட்டமைப்பு, கல்வி, சுற்றுலா, சட்டமன்ற நடவடிக்கைகள், பொது சுகாதாரம், சமூக நலம், கலாசாரத்துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பணியாற்றியவர். துணை அமைச்சராக முதல் அமைச்சரவையில் இடம் பெற்றவர். காபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெறும் அளவுக்குத் திறமையாகப் பணியாற்றியவர்.
மகாராஷ்டிர முதலமைச்சராக சரத்பவார், 1979 ஜூலையில் பதவி வகித்தபோது, எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியவர் பிரதிபா 1985-ல் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு மாநிலங்களவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 நவம்பர் 18 முதல் 1988 நவம்பர் 5 வரை அப்பதவியில் இருந்தார். இதே காலகட்டத்தில் நாடாளுமன்றத்தின் உரிமைக்குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
1988 முதல் 1990 வரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும்.
1991-ல் அமராவதி தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை, மக்களவை ஆகியவற்றுக்கு போட்டியிட்டபோதெல்லாம் வெற்றிக்கனிகளையே பறித்தவர் பிரதிபா அம்மையார்.
மக்களவை உறுப்பினர் பதவிக் காலம் முடிந்த பிறகு தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிரமாகப் பாடுபட்டவர்.
2004 நவம்பரில் கட்சித் தலைமையே அவரை அழைத்து ராஜஸ்தான் மாநில ஆளுனராக நியமித்தது.
Labels:
politics
நீதியைத்தேடி...(கவிதை)
நீதியைத்தேடி...(கவிதை)
கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்தூரிகை கொண்டு வரையப்பட்டஓவியமோ காவியமோ அல்ல இது!எங்களது உடலில் இன்னும்உயிர் உள்ளது என்றமறக்கப்பட்ட உண்மைக்குஎஞ்சியுள்ள ஒரே சான்று!எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்வேதனையை வெளிபடுத்த இந்தஉள்ளத்திற்கு கண்ணில்லையே,கண் கட்டப்பட்ட இவ்வுலகநீதி தேவதையைப் போல்...ஆகையால்தான் வேதனை, வெளியேதெரியும் விழிகளின் வழியே வெப்பமாக!வேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்இரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,பானையில் இருந்தால்தானேஅகப்பையில் வரும்? - தற்போதுஎங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே!ஈவிரக்கமற்ற காட்டேரிகளைப்போல்நாங்களுமா நடமாடும் சடலங்களானோம்?இங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது!அப்பாவிக்கும், பாவிக்கும் இல்லைசிறு வித்தியாசங்கள் இங்கு பல,இருவரும் இருக்கின்றனர்சமமாக!? - இவ்வுலகில்,நடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,சிறைக்கு உள்ளும், வெளியிலும்!நாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்!"அந்த இனிமையான மணித்துளிகளின்நினைவுகள் போதும், மீண்டும்நாம் சந்திக்கும் வரை, அல்லதுசத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை''எனும் வார்த்தைகள் இன்னும் எத்தனைநாட்கள் உதவும் அறியோம் இறைவா!நீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பதுபாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவேஎன்ற எங்கள் நம்பிக்கையை, உன்நீதித் தாராசில் நிறுத்திப்பார்! - அநீதிஇழைக்கப்பட்டோர் உன்னிடம்எதிர்பார்ப்பை கைவிட்டுகளத்தில் இறங்கியதன் காரணம் புரியும்!தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சிலமுத்திரைகளுக்கு அஞ்சிடுவர் இவர்களென்றுஎதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை!இப்போது அவர்களின்எதிர்பார்ப்புகள் அநியாயமாகமறக்கவும், மறுக்கவும் பட்டுவேதனை மட்டுமே தொடர்கதையாக!நீதி தேவதையே, நீ கண் திறக்கமாட்டாயா என்று கேட்பவர்கள்குரல் ஓலமாய் மாறும் முன், உன்நீதி உடனே வழங்கப்பட வேண்டும்!அதுவே உன்னுடைய உடலில்உயிருள்ளது என்பதற்கு எஞ்சிஇருக்கும் கடைசி வாய்ப்பு!!
நன்றி : சத்தியமார்க்கம்
கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்தூரிகை கொண்டு வரையப்பட்டஓவியமோ காவியமோ அல்ல இது!எங்களது உடலில் இன்னும்உயிர் உள்ளது என்றமறக்கப்பட்ட உண்மைக்குஎஞ்சியுள்ள ஒரே சான்று!எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்வேதனையை வெளிபடுத்த இந்தஉள்ளத்திற்கு கண்ணில்லையே,கண் கட்டப்பட்ட இவ்வுலகநீதி தேவதையைப் போல்...ஆகையால்தான் வேதனை, வெளியேதெரியும் விழிகளின் வழியே வெப்பமாக!வேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்இரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,பானையில் இருந்தால்தானேஅகப்பையில் வரும்? - தற்போதுஎங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே!ஈவிரக்கமற்ற காட்டேரிகளைப்போல்நாங்களுமா நடமாடும் சடலங்களானோம்?இங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது!அப்பாவிக்கும், பாவிக்கும் இல்லைசிறு வித்தியாசங்கள் இங்கு பல,இருவரும் இருக்கின்றனர்சமமாக!? - இவ்வுலகில்,நடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,சிறைக்கு உள்ளும், வெளியிலும்!நாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்!"அந்த இனிமையான மணித்துளிகளின்நினைவுகள் போதும், மீண்டும்நாம் சந்திக்கும் வரை, அல்லதுசத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை''எனும் வார்த்தைகள் இன்னும் எத்தனைநாட்கள் உதவும் அறியோம் இறைவா!நீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பதுபாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவேஎன்ற எங்கள் நம்பிக்கையை, உன்நீதித் தாராசில் நிறுத்திப்பார்! - அநீதிஇழைக்கப்பட்டோர் உன்னிடம்எதிர்பார்ப்பை கைவிட்டுகளத்தில் இறங்கியதன் காரணம் புரியும்!தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சிலமுத்திரைகளுக்கு அஞ்சிடுவர் இவர்களென்றுஎதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை!இப்போது அவர்களின்எதிர்பார்ப்புகள் அநியாயமாகமறக்கவும், மறுக்கவும் பட்டுவேதனை மட்டுமே தொடர்கதையாக!நீதி தேவதையே, நீ கண் திறக்கமாட்டாயா என்று கேட்பவர்கள்குரல் ஓலமாய் மாறும் முன், உன்நீதி உடனே வழங்கப்பட வேண்டும்!அதுவே உன்னுடைய உடலில்உயிருள்ளது என்பதற்கு எஞ்சிஇருக்கும் கடைசி வாய்ப்பு!!
நன்றி : சத்தியமார்க்கம்
Labels:
Kavidai
இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்
இஸ்ரேல் சிறைகளில் துன்புறுத்தப்படும் பாலஸ்தீனச் சிறார்கள்
பாலஸ்தீனப் பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக்கூறி பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடுமை ஒருபுறமிருக்க, பாலஸ்தீனச் சிறார்கள் அபுகுரைபுக்கும் குவாண்டனாமோவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லாத கொடுமைகளுக்கு இஸ்ரேல் இராணுவத்தினரால் ஆட்படுத்தப்படுவதாக குழந்தைகள் பாதுகாப்புக்கான பன்னாட்டு அமைப்பு (Defense for Children International - DCI) குற்றம் சாட்டியுள்ளது.
உலகின் பிற நாடுகளைச்சேர்ந்த சிறார்களைப் போலவே பாலஸ்தீனச் சிறார்களும் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. இருப்பினும், அவர்கள் சிறார்கள், குழந்தைகள் என்கிற சிறு கரிசனம் கூட இல்லாமல் காட்டுமிராண்டித் தனமாக அவர்கள் இஸ்ரேலிய படையினரால் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
முஹம்மத் மஹ்சிரி என்ற 17 வயதான சிறுவன் ஒருவனை மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆண்டு கைது செய்தது. இச்சிறுவன் அங்கிருக்கும் ஒரு அகதி முகாமில் தங்கியிருந்தான். அவனைக் கைது செய்ய இஸ்ரேலிய இராணுவம் கூறிய காரணம் அவன் இஸ்ரேலிய இராணுவ டாங்கிகளை நோக்கிக் கல்லெறிந்தது தான். அவனைப் பல்வேறு இராணுவ முகாம்களுக்கு விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்த இராணுவம் அவன் மீது சுமத்திய 'தீவிரவாதக்' குற்றம் நிரூபிக்கப்படாததால் 13 மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்தது.
இச்சிறுவன் DCI அமைப்பிடம் அடைக்கலமான பின் அவனது கண்ணீர்க்கதை தற்போது உலகிற்குத் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 மணி முதல் இரவு 11 மணிவரை ஒருவர் மாற்றி ஒருவராகப் பல்வேறு இராணுவ அதிகாரிகள் இச்சிறுவனைத் துன்புறுத்தி விசாரணை செய்தனர் என்று அவன் கூறினான்.
ஒருமுறை விசாரணையின் போது மழைபெய்ததால் மழையில் நனையவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான். சில அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலையும் மேற்கொண்டதாகவும் அவன் கூறியுள்ளான்.
விசாரணையின் போது ஆட்டு மந்தையை இழுத்து வருவது போல சிறார்களை இராணுவத்தினர் இராணுவ நீதிமன்றத்துக்கு இழுத்து வருவார்கள் என்றும் அவன் தெரிவித்தான்.
மேலும் இதுகுறித்து தகவல் அளித்த DCI அலுவலர் ஒருவர், இஸ்ரேலிய இராணுவம் சிறார்களின் தூக்கத்தைக் கெடுப்பது, உணவோ குடிநீரோ அளிக்காமல் சித்திரவதை செய்வது போன்ற கொடும் உத்திகளை விசாரணையின் போது பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.
DCI அலுவலர் இஸ்ரேல் நாடு குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க செய்யப்பட்ட உலகநாடுகளின் ஒருங்கிணைந்த பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளது நகைப்புக்குரிய வேதனையான செய்தி ஆகும் என்று மேலும் தெரிவித்தார்.
செப்டம்பர் 28, 2000 முதல் மார்ச் 31, 2007 வரை இஸ்ரேலிய இராணுவம் விசாரணை என்ற பெயரால் அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை 860 என்றும் தற்போது அதன் பிடியில் இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை 398 என்றும் அதன் அறிக்கை தெரிவிக்கிறது.
NANDRI: SATYAMARGAM.
Subscribe to:
Posts (Atom)