11 Shawwal 1446 H

Search This Blog

Thursday, July 12, 2007

பள்ளிவாசல் ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க அரசுக்கு கோரிக்கை.

பள்ளிவாசல் ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க அரசுக்கு கோரிக்கை.

பள்ளிவாசல் ஊழியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என மாநில நிர்வாக குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பள்ளிவாசல் பணியாளர் சங்க (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநில நிர்வாகக் குழு கூட்டம் அய்யம்பேட்டை மில்லத் நகர் பள்ளிவாசல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில பொருளாளர் அப்துல்ஹமீது தலைமை வகித்தார். பிலால் லியாகத் அலி வரவேற்றார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணை தலைவர் சந்திரகுமார் சிறப்புரையாற்றினார். மாநில பொது செயலாளர் அப்துல்காதர் சங்க செயல்பாடுகள் குறித்து விளக்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிவாசல்களினல் பணிபுரியும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு பணியாளர்களும் பயனடையும் விதத்தில் தனி நலவாரியம் அமைத்து தொழிலாளர் நலத்துறையின் மூலம் செயல்படுத்திட வேண்டும். வக்ப் போர்டு மூலம் குறைந்த எண்ணிக்கையிலான உலமாக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 60 வயதை கடந்த அனைத்து பள்ளிவாசல் பணியாளர்களுக்கும் வக்ப் போர்டு மூலம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ரயிலடி பள்ளி பிலால் சாகுல்அமீது நன்றி கூறினார்.

No comments:

Six C's of Character - Yasir Fazaga