Search This Blog

Saturday, June 30, 2007

Riot-hit Gujarat children face uncertain future in Hyderabad

Riot-hit Gujarat children face uncertain future in Hyderabad



User Rating: / 0 PoorBest
By Mohammed Shafeeq
Hyderabad, June 30 : An uncertain future looms ahead for a group of Gujarat children who were brought here after the 2002 sectarian riots in that state with a promise of free education. The NGO that brought them here has suddenly shut down the residential school where they study, and they have nowhere to go.
The children, who were promised free education till Class 12, were shocked to see their school and hostel in the Tolichowki neighbourhood locked upon their return from Gujarat after a two-month vacation.
With nowhere to go, a group of around 45 children were forced to stay on the footpath for around two weeks. About 20 of them, including six who fell ill, returned to their home state while the others have decided to stay back here in the hope that the NGO - Muslim Educational, Social and Cultural Organisation (MESCO) - would admit them in other schools run by it.
The children who had to return to Gujarat include Nazim, whose tailor father was shot dead by the police during the riots. Nazim, who had passed Class 9, had come with his mother. He and the other children who returned were allegedly not given a certificate of their marks or a transfer certificate to enable them to continue their education in Gujarat.
Of the children who decided to remain, 16 were staying in Mehdipatnam in a small two-room house provided by a kind-hearted man. The children, aged between seven and 16, are feeling dejected seeing other children go to their schools, which re-opened early this month for the new academic year.
Another group of nine children is staying at another house. They have almost run out of the little money they had brought along. They told this IANS correspondent that they just don't know what to do now.
Taj Mohammed, the father of Class 9 student Irfan Siddiqui, has come from Ahmedabad to drop his son. He feels totally shattered. "The children were brought with high promises to fulfil their dreams of becoming doctors and engineers. In one stroke their dreams have been shattered," he said.
Giving reasons for the school's closure, MESCO secretary Fakhruddin Mohammed said that the lease for the school and hostel building had run out. The NGO offered to accommodate the children in another school, Al-Salaama, but said the children and their parents are not willing.
"The quality of education at Al-Salaama is very poor and the hostel there is already overcrowded," said Taj Mohammed.
"Our children have been studying in MESCO for five years. They want to continue their education. Why can't MESCO admit the children in other schools and hostels run by it," asked Ayesha Banu, mother of Class 8 student Mohammed Arif.
The parents alleged that though their children were brought with a promise of free education till Class 12, they were paying Rs.15,000 to Rs.18,000 annually for each child. "A few students were paying Rs.20,000 to Rs.25,000," said Nazeer Khan, father of another child.
"When they are not imparting free education to the children why should they refuse to admit the students in other schools run by them?" he asked.
One of the parents alleged that the NGO was running the school till the donations from various charitable organisations from India and abroad kept pouring in after the riots.
"They were running the school only to get the funds, and when the funds stopped coming from abroad they shut down the school," one of them said.
Nazeer Khan alleged that the NGO had sent back several children as their parents could not afford the hefty fees. One of them was Faisal, whose father was killed in police firing during the riots. The boy had to drop out of Class 4 two years ago as his mother could not pay the fees.
According to some parents, the school had closed due to an internal fight in MESCO.
"Director of MESCO Mohammed Azam and his son-in-law Fakhruddin Ahmed received huge funds in the name of these children. The funds were siphoned off," claimed a man who had played a key role in bringing the children to Hyderabad.
"The children who were studying with Gujarati as their medium of instruction had to struggle to switch over to English when they came here. Now if they are to return to Gujarat they will have to again switch over to Gujarati-medium schools," he said.
"After studying here for five years our children have attained non-local status in Gujarat. If they return it will also have a psychological impact on them," said Hafiz Suleman, who is from Gujarat's Mehsana district. (IANS)

Wednesday, June 27, 2007

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை

தாய்ப்பாலுக்கு நிகராய் ஏதுமில்லை
-http://www.kumudam.com/
ம.உ.லெனின் -ஒரு குழந்தை பிறந்து, முதல் மூன்று மாதங்கள் மிகவும் முக்கியமான ஒரு பருவமாகும். இந்த மூன்று மாத காலத்தில் குழந்தையைப் பராமரிக்கும் முறை சரியாக இருந்தால் பிற்காலத்தில் குழந்தையின் உடல் நலம், வளர்ச்சி குறித்த பல பிரச்சினைகளை வராமல் தடுக்கலாம்.இந்தக் காலகட்டத்தில் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றைச் சமாளிக்கும் வழிகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.குழந்தை பிறக்கும் காலம்ஒரு குழந்தை கருவில் உருவான காலத்தில் இருந்து 37 முதல் 40 வாரங்களில் பிறக்க வேண்டும். இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் முழுவளர்ச்சி பெற்ற, குறித்த காலத்தில் பிறந்த குழந்தைகள் என்று அழைக்கப்படுகின்றன.37 வாரங்களுக்கு முன் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்கு முன் பிறந்த குழந்தைகள்.41 வாரங்களுக்குப் பின்னர் பிறக்கும் குழந்தைகள் குறித்த காலத்திற்குப் பின்பிறந்த குழந்தைகள்.குறித்த காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி நிலையை அடையாததால் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.பிறக்கும் குழந்தையின் எடைஒரு இந்தியக் குழந்தை பிறக்கும் போது இருக்க வேண்டிய சராசரி எடை 2.5 முதல் 3.5 கிலோ கிராம் ஆகும்.எடை 2 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் இந்தக் குழந்தைகளை ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகள் என்று அழைக்கிறோம்.உடல் எடை அதிகரித்து, உடல் இயக்கங்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படும் வரை, இந்தக் குழந்தைகளை NEONATAL INTENSIVE CARE UNIT (NICU) என்று அழைக்கப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.எடை 1.5 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தால் அந்தக் குழந்தைகள் மிக ஆபத்தான நிலையில் உள்ளவையாகக் கருதப்பட்டு மிகப் பிரத்தியேகக் கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.பராமரிப்பில் முக்கியமானவை:தாய்ப்பால் கொடுத்தல்மசாஜ்குளிப்பாட்டுதல்,தோல் பராமரிப்புகண்கள், தொப்புள் கொடி பராமரிப்புஎடைதடுப்பு ஊசிகள்பிற உணவுகள் கொடுத்தல்தாய்ப்பால்தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன.இன்றைய சமுதாயச் சூழலில் பல தாய்மார்களுக்குப் பாலூட்டும் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் பிற்காலத்தில் குழந்தைகள் பல நோய்களை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.தாய்ப்பால் ஊட்டுவதால் உள்ள நன்மைகள்:தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது.தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது.குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது.கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லா சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது.பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் செரிமானம் ஆகும்.அலர்ஜி ஆகும் வாய்ப்புகள் குறைவு.குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் வரை, தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் பல நோய்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்’ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது.தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.தாய்ப்பால் ஊட்டுவதை எப்போது துவங்குவது?குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் துவங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும்.நார்மல் டெலிவரி எனில் பிரசவம் ஆன 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக பாலூட்டத் துவங்கலாம்.சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளி வந்த உடன் பாலூட்டத் துவங்கிவிடலாம்.சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும்.ஒரு சராசரி இந்தியத் தாயின் உடலில் ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவு 700 மி.லிட்டர் முதல் 1000 மி. லிட்டர் வரை உள்ளது.குழந்தைக்கு 1 வயது ஆகும் வரையிலும் தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். 1 ஒன்றரை வயதுவரை ஊட்டுவது நன்று.சில தகவல்கள்.....கொலஸ்ட்ரம்பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த கொலஸ்ட்ரம் என்ற வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும்.தாய்ப்பால்பிரசவம் ஆன மூன்று நாட்களுக்குப் பின் சுரக்கத் துவங்கும் பாலில் குழந்தைக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் இருக்கும்.ஊட்டும் போது முதலில் வரும் பால்பாலூட்டத் துவங்கும் போது முதலில் வரும் பாலில் புரதம், மாவுச் சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் ஆகியவை அதிகம் இருக்கும்.கடைசியில் வரும் பால்பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.தடுப்பூசி: பிற உணவுகளை மருத்துவரின் ஆலோசனைப்படி கொடுக்கலாம்.

3 ஆண்டுகளில் 5 மடங்கு கோடீஸ்வரியான மாயாவதி

3 ஆண்டுகளில் 5 மடங்கு கோடீஸ்வரியான மாயாவதி
புதுடெல்லி, ஜூன் 27-நாட்டில் உள்ள மிகப்பெரிய தொழில் அதிபர்கள் ஆச்சரியமும், பொறாமையும் படும் அளவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் தனது சொத்தை 5 மடங்கு பெருக்கி சாதனை படைத்துள்ளார் உ.பி.முதல்வர் மாயாவதி.இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி ஒரு மாநில முதல்வராக இருப்பவர் அந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். உ.பி.முதல்வர் மாயாவதி தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லாத காரணத்தால் மாநில மேலவை உறுப்பினர்(எம்.எல்.சி) பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனக்கு ரூ52.6 கோடி சொத்து இருப்பதாக கணக்கு கொடுத்துள்ளார். இவர் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உ.பி.மாநிலம் அக்பர்பூர் தொகுதியில் போட்டியிட்ட போது தன்னிடம் ரூ11 கோடி அளவுக்கு மட்டும் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார். சரியாக 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் அவருடைய சொத்துக்கள் 52 கோடியாக கிட்டத்தட்ட 5 மடங்கு உயர்ந் திருப்பது அரசியல் நோக்கர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:உ.பி.முதல்வர் மாயாவதி கடந்த முறை தனது வேட்புமனுவில் குறிப்பிட்ட அசையா சொத்துக்களில் ஒரு சில டெல்லியில் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் அவற்றின் விலை இரு மடங்கு வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம். 5 மடங்கு உயர்ந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை. மேலும் கடந்த முறை தன்னிடம் ரூ31 லட்சம் மதிப்புடைய தங்க நகை இருப்பதாக கூறியவர் தற்போது ரூ70 லட்சம் மதிப்புள்ள தங்க நகை இருப்பதாக கூறியுள்ளார். தற்போது காட்டியுள்ள சொத்துக் கணக்கில் டெல்லி சர்தார் பட்டேல் மார்க் பங்களா ஒன்றை சேர்த்துள்ளார். அதன் மதிப்பு ரூ18 கோடி என கணக்கு கொடுத்துள்ளார். ஆனால் உண்மையில் அதன் மதிப்பு பல மடங்கு இருக்கும். எம்.பி. சம்பளத்தில் இந்த அளவு சொத்து சேர்க்க முடியாது. எந்த வகையில் சொத்து சேர்ந்தது என்பது மாயாவதிக்கு மட்டும் தெரிந்த ரகசியம். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

ஆவியுடன் பேசினேன் பிரதீபா புது சர்ச்சை

ஆவியுடன் பேசினேன் பிரதீபா புது சர்ச்சை
ஜெய்ப்பூர், ஜூன் 27-தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கிவரும் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் தற்போது ஆவியுடன் பேசியதாக பொது மேடையில் பேசிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதீபா பாட்டீல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தனது கட்டுப்பாட்டை மீறிய பிரச்னைகளில் சிக்கிக் கொள்வது ஒரு புறம் இருக்க தன் வாயாலே பல சர்ச்சைகளில் பிரதீபா சிக்கி வருகிறார். முதன் முதலாக இவர் ஆரம்பித்த சர்க்கரை ஆலை ஒன்று வங்கி கடன் திருப்பி செலுத்த முடியாமல் திவாலானதாக தகவல் வெளியானது. பின்னர் இவரது தம்பி கொலைக்குற்றம் ஒன்றில் சிக்கியிருப்பதாகவும், அதிலிருந்து தம்பியை காப்பாற்ற இவர் முயன்றதாகவும் செய்திகள் வெளியாயின.இவர் தலைவராக இருந்த கூட்டுறவு வங்கியில் உறவினர்களுக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளில் பிரதீபாவுக்கு நேரடி தொடர்பு இல்லை என அவரது சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் தன்னுடைய பேச்சால் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் ஜெய்ப்பூரில் பொது மேடையில் பேசிய பிரதீபா வடநாட்டு பெண்களுக்கு முகத்தை மூடும் பழக்கம் முகலாய ஆதிக்கத்தால் வந்தது என சர்ச்சையை எழுப்பினார். இந்தியாவில் நீண்ட காலமாகவே பெண்கள் முக்காடு போடும் பழக்கம் இருந்ததாக இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு முன்பு ராஜஸ்தான் மாநில கவர்னர் என்ற வகையில் பிரம்மகுமாரிகள் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், Ôபிரம்மகுமாரி இயக்கத்தை தொடங்கிய பாபா, ஆவியாக வந்து என்னிடம் பேசினார். உயர்ந்த பதவி காத்திருப்பதாக கூறினார்Õ என்றார்.இந்திய ஜனாதிபதியாவதற்கு வாய்ப்புள்ள ஒருவர் ஆவியுடன் தொடர்பு கொண்டதாக பேசியிருப்பது தற்போது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து பா.ஜ. செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், Ôஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதீபா பாட்டீல் தான் என்ன பேசுகிறோம் என்பதை யோசித்து பேச வேண்டும்Õ என்றார்.

Tuesday, June 26, 2007

காணாமல் போகும் காஷ்மீரிகள்

காணாமல் போகும் காஷ்மீரிகள்
காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருந்தாலும் அந்த குரல் அதிகம் எடுபட்டதில்லை. இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதிகள் என்று கூறுவது வழக்கமான ஒன்று. இத்தகைய மனித உரிமை மீறல்களை பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் கண்டுகொண்டதில்லை.ஆனால் கடந்த வாரம் காஷ்மீரில் தாங்கள் "பதவி உயர்வு பெரும் பொருட்டு" சில இராணுவத்தினர் "Fake encounter"ல் அப்பாவி காஷ்மீரிகளை கொன்றிருப்பதை இந்திய வெகுஜன ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. (இது குறித்து வலைப்பதிவுகளில் எழுதப்பட்டதா என்று தெரியவில்லை).இது குறித்த ஹிந்து நாளிதழின் தலையங்கம்Criminals in combat fatiguesCNN IBN செய்திப் படங்கள்Price families pay for fake encountersTruth behind Jammu & Kashmir fake encountersஇது காஷ்மீரில் புதியதாக நடக்கும் நிகழ்வு அல்ல. இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஆண்டு நான் எனது பதிவில் வெளியிட்ட ஒரு குறும்படம் - காஷ்மீர் பற்றிய குறும்படம் . ஆனால் இத்தகைய செய்திகள் இப்பொழுது தான் வெகுஜன ஊடகங்களில் வெளியாகின்றன.அப்பாவி காஷ்மீர் இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்வதும், பிறகு அந்த இளைஞர்களை பாக்கிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று கூறி போலியான encounterல் சுட்டுத்தள்ளுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வு தான்.Association of Parents of Disappeared Persons (APDP) என்ற காஷ்மீர் இளைஞர்களின் பெற்றோர்களைக் கொண்ட அமைப்பு பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளாக முன்நிறுத்தப்பட்ட பலர் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்கள் தான் என்று கூறுகிறது. காஷ்மீரில் தீவிரவாதம் உருவாகிய பிறகு இது வரை சுமார் 10,000 காஷ்மீர் இளைஞர்கள் காணாமல் போய்விட்டதாக இந்த அமைப்பு தெரிவிக்கிறது.2003ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு வெளியிட்ட புள்ளி விபரங்களில் இது வரை காஷ்மீரைச் சேர்ந்த 3,744 காஷ்மீரிகள் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கிறது. ஆனால் இதில் காவல் துறையாலும், இராணுவத்தினராலும் சுமார் 60பேர் மட்டுமே கொல்லப்பட்டிருக்க கூடிய வாய்ப்பு இருப்பதாக காஷ்மீரின் அப்போதைய முதலமைச்சர் முப்தி முகமது சையீது தெரிவித்தார். இப்போதைய முதல்வர் குலாம் நபி ஆஸாத்தோ, காஷ்மீரில் இது வரையில் காணாமல் போய் இருப்பவர்கள் குறித்து என்னால் கூற முடியாது, ஆனால் எனது ஆட்சியில் காணாமல் போய் இருப்பவர்கள் குறித்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.ஒரு மாநிலத்தின் முதல்வரே ஒப்புக்கொண்டுள்ள மிக மோசமான மனித உரிமை மீறல்களை காஷ்மீர் மக்கள் எதிர்கொண்டுள்ளனர் என்பதையே இது தெளிவுபடுத்துகிறது. இது ஒரு மோசமான நிலை ஆகும்.நான் என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்ததை தான் மறுபடியும் சுட்டிக்காட்ட நினைக்கிறேன்காஷ்மீர் இந்தியாவிற்குச் சொந்தமா, பாக்கிஸ்தானுக்குச் சொந்தமா என்பதை விட காஷ்மீர் மக்களுக்குச் சொந்தமானது, அவர்களின் முடிவு தான் முக்கியமானது என்பதை நாம் உணரவேண்டும். ஆனால் நம்மில் பலர் இதனை புரிந்து கொள்வதேயில்லை. உண்மையை கூறுபவர்களை தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்தி விடுகிறோம்.காஷ்மீரில் இயங்கும் தீவிரவாத இயக்கங்கள் மற்றும் இந்திய இராணுவத்தினரால் பாதிக்கப்படுவது அப்பாவி காஷ்மீர் மக்கள் தான். இராணுவம், தீவிரவாதிகள் என இவர்கள் இருவரிடம் சிக்கிக் கொண்டு தங்களின் அன்றாட வாழ்க்கையை கடும் இன்னல்கள், மனித உரிமை மீறல்கள் இவற்றிடையே கழிக்கும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம் மதிக்கப்பட வேண்டும்BBC செய்தி - Kashmir shut down over killings

Monday, June 25, 2007

Muslims jailed for Gujarat murder

Muslims jailed for Gujarat murder

Haren Pandya was killed in March 2003Nine Muslims have been sentenced to life in prison in the Indian state of Gujarat for the killing of the state's former Home Minister, Haren Pandya.
Mr Pandya was shot in broad daylight in a park in Gujarat's commercial centre, Ahmedabad, in March, 2003.
He was a leading figure in the governing Hindu-nationalist Bharatiya Janata Party (BJP) in Gujarat.
The court said the Muslims killed him in revenge for the 2002 Gujarat riots in which more than 1,000 Muslims died.
The state government in Gujarat was heavily criticised for failing to protect the state's Muslims from Hindu mobs during the rioting.
Other sentences
The nine Muslims given life sentences included Asghar Ali who the court said had fired the gun.
Two other men were given seven-year sentences and one man was given a five-year term.
As well as being a key figure in the BJP, Haren Pandya was also a senior member of the right wing Hindu organisation, the RSS.
Mr Pandya was reported to have had bitter differences with Gujarat's Chief Minister, Narendra Modi.

புற்றுநோயை தடுக்கும் பூசணிக்காய்

புற்றுநோயை தடுக்கும் பூசணிக்காய்

பினாங், ஜுன். 24-

பூசணிக்காய்க்கு புற்று நோயை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலேஷியா பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்பத் துறை பேராசிரியை நூர் அஜியா அப்துல் அஜீஸ் பல ஆண்டுகளாக ஆய்வு மேற் கொண்டார். புற்றுநோய் தொடர்பான அவர் மேற் கொண்ட ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பூசணிக்காய்க்கு புற்று நோயை குணமாக்கும் ஆற்றல் உள்ளது. பூசணிக்காயில் ஒருவித `ஸ்டார்ச்' உள்ளது. இந்த ஸ்டார்ச்சுகள் `புரொப்பி யோனிக்' அமிலத்தை உருவாக் கும் ஆற்றல் கொண்டவை.

இந்த அமிலம் காரணமாக பூசணிக்காயில் உள்ள `ஸ்டார்ச்' புற்றுநோயை உருவாக்கும் செல்கள் பலவீனப்படுத்து கின்றன. தீமை தரும் பாக்டீரி யாக்களும் அழிந்து விடு கின்றன.

பூசணிக்காயின் சதைப் பகுதியை மாவாக்கி உலர்த்தி யும் பயன்படுத்தலாம். இதன் மூலமும் புற்றுநோயை குண மாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பூசணிக்காயில் அதிக அளவு நார்சத்தும் உள்ளது. தாது உப்புக்களும் உள்ளன.

குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!

குஜராத் 'மோதல்" படுகொலைகள்: இதுதான் இந்து ராஷ்டிரம்!
குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் நோக்கத்தோடு குஜராத்திற்கு வந்தபொழுது, போலீசாரோடு நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக'' குஜராத் போலீசு துறையைச் சேர்ந்த தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரிகள் அறிவித்தனர்.""சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றியும்; அவரது மனைவி கவுசர்பீ காணாமல் போனது பற்றியும் மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்'' எனக் கோரி, சோராபுதீனின் சகோதரர் ருபாபுதீன், உச்சநீதி மன்றத்திற்குக் கடிதமொன்று எழுதினார். அக்கடிதத்தைப் பொதுநல வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையைப் பற்றி விசாரிக்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இம்மோதலைப் புலனாய்வு செய்த கீதா ஜோஹ்ரி என்ற அதிகாரி, ""இது போலி மோதல் கொலையாக இருக்கலாம்'' என அறிக்கை அளித்தார். இப்பொழுது இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ""சோராபுதீன் போலி மோதலில்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது மனைவி கவுசர்பீயும் கொல்லப்பட்டு, அவரது சடலம் இரகசியமாக எரிக்கப்பட்டு விட்டதாக'' குஜராத் அரசே உச்சநீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் கருதப்படும் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என். தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளும்; ஆய்வாளர் என்.ஹெச்.தாபி, காவலர் சாந்தாராம் ஷர்மா; போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியனின் தனி உதவியாளர் அஜய் பர்மர் உள்ளிட்டு ஆறு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.""ஹைதராபாத் நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்குத் தனது மனைவி கவுசர்பீ, தனது நண்பர் துளசிராம் பிரஜாபதி ஆகியோரோடு பயணம் செய்து கொண்டிருந்த சோராபுதீன் வழி மறிக்கப்பட்டு, நவம்பர் 22, 2005 அன்று நள்ளிரவில் போலீசு கண்காணிப்பாளர் ராஜ்குமார் பாண்டியன் தலைமையில் சென்ற குஜராத் மற்றும் ஆந்திர மாநில போலீசாரால் கடத்தப்பட்டது தொடங்கி, நவம்பர் 26, 2005 அன்று அகமதாபாத் நகரில் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் படையால் சோராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது வரை அனைத்தையும்'' போலி மோதல் கொலையில் பங்கு கொண்ட காவலர் அஜர் பர்மர் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.சோராபுதீன் கொல்லப்பட்ட பிறகு, அவரது மனைவி கவுசர்பீ, பா.ஜ.க.வின் அகமதாபாத் நகர கவுன்சிலர் சுரேந்திரா ஜிராவாலாவுக்குச் சொந்தமான பங்களாவில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு, நவ. 28, 2005 அன்று அதே பங்களாவில் கொல்லப்பட்டு, பிறகு அவரது சடலம், (இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி) வன்சாராவின் சொந்த கிராமமான இலோலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இரகசியமாக எரிக்கப்பட்டதை குஜராத் மாநில தீவிரவாத எதிர்ப்பு போலீசு படையைச் சேர்ந்த ஓட்டுநர் நாதுசிங் ஜடேஜா வாக்குமூலமாக அளித்திருக்கிறார்.மேலும், கடத்தி வரப்பட்ட சோராபுதீன் கவுசர்பீ தம்பதியினரைத் தனியார் பண்ணை வீட்டில் சட்ட விரோதமாக அடைத்து வைத்திருப்பதற்கு உதவிய சதீஷ்பாய் ராம்ஜிபாய் ஷர்மா; கவுசர்பீயின் சடலத்தை எரிப்பதற்குத் தேவையான விறகினை போலீசுக்கு விற்ற பகவதி டிம்பர் மார்ட் என்ற நிறுவனத்தின் அதிபர்; கவுசர்பீயின் சடலம் எரிப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டபொழுது, சகதியில் சிக்கிக் கொண்ட வாகனத்தை மீட்பதற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்ட கிரேன் இயக்குநர் ஆகியோரும் கவுசர்பீயின் கொலை தொடர்பாகச் சாட்சியம் அளித்துள்ளனர்.சோராபுதீன் போலி மோதலில் கொல்லப்பட்டதற்கு, கவுசர்பீ வலுவான சாட்சியமாக இருந்திருக்கிறார். குஜராத் போலீசார், இந்த வலுவான சாட்சியத்தைக் கலைப்பதற்காகவே, ""பணம் தருகிறோம்; பாகிஸ்தானுக்கு ஓடி விடு'' என கவுசர்பீயிடம் பேரம் நடத்தியுள்ளனர். அதற்கு கவுசர்பீ ஒத்துக் கொள்ளாததால்தான், அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டு, அதற்குப் பின் கொல்லப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.இம்மோதல் கொலையின் மற்றொரு சாட்சியான துளசிராம் பிரஜாபதி, இராசஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ரோந்து போலீசாரால், டிச.26, 2006 அன்று குஜராத் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான பனசகந்தாவில் உள்ள அம்பாஜி நகரில் நடந்த ""மோதலில்'' சுட்டுக் கொல்லப்பட்டார்.சோராபுதீனைச் சுட்டுக் கொன்ற போலீசு படைக்குத் தலைமை தாங்கிய வன்சாரா, குஜராத் மாநில எல்லைப்புற போலீசு பிரிவின் போலீசு இயக்குநராகப் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது வாரத்திலேயே, பிரஜாபதி அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியில் நடந்த "மோதலில்' சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதும்; இம்மோதல் சோராபுதீன் கொலை பற்றிய விசாரணை ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே நடந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சோராபுதீன் கொலையின் மற்றொரு சாட்சியான சில்வஸ்டர் டானியல் கிறிஸ்டியன், பிரஜாபதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு ""காணாமல்'' போய்விட்டதாகக் கூறப்படுகிறது.சோராபுதீன் கொலை தொடர்பான சாட்சியங்களை ஐ.பி.எஸ். அதிகாரி வன்சாரா ஒருபுறம் அழித்துக் கொண்டிருந்த பொழுது, இன்னொரு புறம் குஜராத் அரசின் உள்துறை அமைச்சகம் கொலை தொடர்பான விசாரணையைத் தாமதப்படுத்துவதற்கு எல்லா உள்ளடி வேலைகளையும் செய்தது.உச்சநீதி மன்றம், இம்மோதல் கொலையை விசாரிக்குமாறு சனவரி 21,2006 அன்று குஜராத் அரசிற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசு உயர் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்திய உள்துறை துணை அமைச்சர் அமித் ஷா, ""கவுசர்பீ, சோராபுதீனின் சட்டபூர்வ மனைவி கிடையாது; கவுசர்பீ பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தானுக்குத் தப்பியோடியிருக்கலாம்'' என அண்டப்புளுகை அவிழ்த்து விட்டார். உச்சநீதி மன்ற உத்தரவு வந்து ஆறு மாதங்கள் கழித்துதான், இம்மோதல் கொலை பற்றிய விசாரணை அதிகாரியாக கீதா ஜோஹ்ரி நியமிக்கப்பட்டார்.""இது போலி மோதல் படுகொலை'' என அவர் அளித்த முதல் அறிக்கையை, உச்சநீதி மன்றத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்காமல், குஜராத் அரசு காலதாமதப்படுத்தியது. விசாரணை தொடர்பாக ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்த கீதா ஜோஹ்ரிக்கு, அந்நகருக்குச் செல்லும் அனுமதி மறுக்கப்பட்டது. வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் ஆகிய மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் குற்றவாளிகளென கீதா ஜோஹ்ரி முடிவு செய்து அறிக்கை கொடுத்த பிறகு, அக்குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடாது என கீதா ஜோஹ்ரிக்கு வாய்மொழி உத்தரவு இடப்பட்டது.இறுதியாக, விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கத்துடன், கீதா ஜோஹ்ரிக்குப் பதிலாக அவரின் ""எதிரி'' ரஜ்னிஷ் ராய் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, ரஜ்னிஷ் ராய் அம்மூன்று அதிகாரிகளைக் கைது செய்ததோடு, அவர்களை உண்மை அறியும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் போவதாக அறிவித்தார். இதே சமயத்தில், ""கீதா ஜோஹ்ரி ஏன் மாற்றப்பட்டார்?'' என உச்சநீதி மன்றம் கேட்டதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குஜராத் அரசு, ரஜ்னிஷ் ராயைத் தூக்கியடித்துவிட்டு, கீதா ஜோஹ்ரியை மீண்டும் விசாரணை அதிகாரியாக நியமித்தது. எனினும், கீதா ஜோஹ்ரி தன்னிச்சையாகப் செயல்படுவதைத் தடுப்பதற்காக, அவருக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது, குஜராத் அரசு.குஜராத் மாநில காங்கிரசு கமிட்டியின் தலைவர் பரத்சிங் சோலங்கி, ""ராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மார்பில் கற்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் முதலாளிகளைப் பணம் கேட்டு மிரட்டி வந்த சோராபுதீனைப் போட்டுத் தள்ள அவர்கள் விரும்பியதாகவும்; அதற்கான பேரம், பா.ஜ.க. தலைவர்கள் மூலம் வன்சாராவிடம் நடந்ததாகவும்; இதற்காக 60 இலட்ச ரூபாய் பணம் கைமாறியதாகவும்'' குற்றஞ் சுமத்தியிருக்கிறார். குஜராத் மாநில போலீசு இந்தப் பின்னணி பற்றி விசாரணை நடத்தவேயில்லை.
···
இது போன்ற மர்மம் நிறைந்த ""தேச பக்த கொலைகள்'' இந்து ராஷ்டிரமான குஜராத்தில் இரண்டு மாதத்திற்கு ஒன்று நடப்பதாகவும்; நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான போலீசு அதிகாரியான வன்சாரா 9 மோதல் கொலைகளை நடத்தி, 15 பேரைக் கொன்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.ஐந்து ஆண்டுகளுக்கு முன், அக். 22, 2002 அன்று சமீர்கான் என்ற முசுலீம் இளைஞர் குஜராத் மாநில குற்றப் பிரிவு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்சாரா தலைமையில் நடந்த இம்மோதல் படுகொலை, மோடியின் அரசியல் பயணத்தில் முக்கியமான ஒன்று.""சமீர்கான் ஜெய்ஷ்இமுகம்மது என்ற பாக். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன்; பாக்.இல் பயங்கரவாதப் பயிற்சி பெற்றவன்; நரேந்திர மோடியைக் கொல்லவே குஜராத்திற்குள் நுழைந்திருக்கிறான்'' என வன்சாரா சமீர்கானைச் சுட்டுக் கொன்ற பிறகு பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் முழு வீச்சில் நடந்து கொண்டு இருந்தது. நரேந்திர மோடி, ""குஜராத் பெருமையைக் காப்பாற்ற உழைக்கும் என்னை முசுலீம் ஜிஹாதிகள் குறி வைக்கிறார்கள்'' எனக் கூறி, இம்மோதலைத் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார்.இம்மோதல் படுகொலையை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம், ""சமீர்கான் எந்தவொரு தீவிரவாத அமைப்பையும் சார்ந்தவரோ, பாக்.இல் தீவிரவாதப் பயிற்சி பெற்றவரோ கிடையாது'' எனத் தீர்ப்பளித்தது. இப்படுகொலையை மோதலாகக் காட்ட முதலமைச்சர் அலுவலகமும், போலீசு அதிகாரிகளும் இணைந்து பல மோசடிகள் நடத்தியிருப்பதை, ஐ.கே.யாதவ், தீர்த் ராஜ் என்ற இரு உயர் போலீசு அதிகாரிகளே தங்களின் விசாரணையில் கண்டறிந்து அம்பலப்படுத்தியுள்ளனர்.ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் நகரின் நுழைவாயில் பகுதியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹன் உள்ளிட்டு நான்கு முசுலீம்கள் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுவும், மோடியின் உயிரை ""தீவிரவாதிகளிடமிருந்து'' காப்பாற்ற, வன்சாரா நடத்திய மோதல்தான். இம்மோதல் கொலை பற்றி தேசிய மனித உரிமைக் கமிசன் குஜராத் போலீசாருக்கு எழுதிய கடிதத்தில், ""இம்மோதல் பற்றி போலீசார் விவரித்துள்ளதில் கடுகளவுகூட அடிப்படை ஆதாரம் இல்லை'' எனக் குறிப்பிட்டுள்ளது.பி.ஜி. வர்கீஸ் என்ற பத்திரிகையாளர், ""குஜராத்தில் 2003க்கும் 2006ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த 21 மோதல் படுகொலை பற்றி முறையாக விசாரணை நடத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். ""இந்த 21 மோதல் படுகொலைகளில் ஒன்றில் கூடப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூடக் கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை'' என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
···
சோராபுதீன் கொலையை இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு நியாயப்படுத்தி வரும் இந்து மதவெறிக் கும்பல், இன்னொருபுறம், ""மற்ற மாநிலங்களில் போலி மோதல் கொலைகளே நடப்பதில்லையா?'' என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து விட்டது.""மோதல்'' கொலைகளின் மூலம்தான் தீவிரவாதிகளை ஒழிக்க முடியும் என்ற பொதுக் கருத்தை, ஓட்டுக் கட்சிகளும், போலீசு அதிகாரிகளும், பத்திரிக்கைகளும் இணைந்து உருவாக்கி வருகின்றன. மேலும், ""தீவிரவாதி யார்?'' என்ற கேள்விக்கு, வலதுசாரி பா.ஜ.க. தொடங்கி இடதுசாரி போலி கம்யூனிஸ்டுகள் வரை, அனைத்து ஓட்டுக் கட்சிகளின் பதிலும் ஒன்றுதான்.அதனால்தான், காங்கிரசாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் சோராபுதீன் கொலையை நியாயப்படுத்தும் மோடியின் ""தேச பக்த'' அரசியலை எதிர்த்து நிற்க முடியவில்லை. ""சோராபுதீன் கொலையை சி.பி.ஐ. விசாரிக்கத் தேவையில்லை'' என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து விட்டதால், காங்கிரசும், போலி கம்யூனிஸ்டுகளும் மூக்கறுந்து போய் நிற்கிறார்கள் என்பதே உண்மை.மோதல் கொலைகள், தடா, பொடா போன்ற அரசு பயங்கரவாதத்தையும், ஆர்.எஸ்.எஸ்.இன் இந்து மதவெறி பயங்கரவாதத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் என்றால், ""நக்சல்பாரிகள், தேசிய சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் போராளிகள், முசுலீம்கள் இவர்கள்தான் தீவிரவாதிகள்'' என இந்திய ஆளும் கும்பல் உருவாக்கி வைத்துள்ள கருத்தை முதலில் அடியோடு புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால், மோடி போன்ற இந்து மதவெறி பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதையும், வன்சாரா போன்ற காக்கிச் சட்டை கொலைகாரர்கள் ""ஹீரோ''க்களாக வலம் வருவதையும் தடுக்க முடியாது.·

குப்பன்

Sunday, June 24, 2007

TIME MANAGEMENT IN ISLAMIC PERSPECTIVE

Bismillah-hir-Rahmaan-nir-Raheem
AssalaamuAlaikum Wa Rahmatullahi Wa Barakaatuh
TIME MANAGEMENT IN ISLAMIC PERSPECTIVE

"Close has come to mankind his accounting. Will he still be heedless?"

The above Qur'anic verse is the beginning of Surah Ambiya, chapter 21, followed by narrations of the people who were before us, people who were destroyed on the account of their wrong doings.

Life has only one chance.

If you fail in your exams, there is always a next year. If you lose your spouse, there can be a second marriage, but if you die, there is no second chance. This life is only one opportunity.

Those who were before us had lives longer than us. The Qur'an talks about Nuh (as), that he worked among his people for 950 years; whereas the average life of this Ummah is around 60 years.

We are the last to come but the first to enter Paradise.

With this short life, we still have the opportunity of making the best. It all depends on how you do, what you leave behind, not whatever you leave behind.

The difference between doing and wanting to do.

There are many things in life that we want to do desperately, but we are unable to do them due to various reasons. But, there are many things in our life which we can do, we are supposed to do, yet we do not do them. The list would be a long one. You can include memorizing of Qur'anic verses, visiting a dying relative or repaying you debt. You have chains of excuses because you don't want to do these things.

Let us see how much we live actually.

If you have to live for 60 years, subtract 15 years of your boyhood where no one questions you. From the remaining 45 years, if you sleep for 8 hours a day, you have deleted 15 years in sleeping. From the remaining 30 years, if you spend 2 hours on the television, you have 2.5 years watching what other people do and nobody pays you for that. From the remaining 27 and half years of your life, you have to earn and yet find out ways for immeasurable reward from Allah.

How and where is our time wasted?

Time is wasted in minutes. E.g. waiting for a friend, at a bus-stop, chatting on useless topics.

Assemble these pieces of minutes everyday and count how many hours you waste every year.

"Let every man know what he has sent forth." (59:18)

1) Make a list of your time wasters even if they are a few minutes long.
2) Make a list of the things which remain unattended by you and have the potential to become a problem if you don't give them immediate attention.

Our most productive actions.

a) Perform Isha and Fajr salaah in congregation and receive a reward of praying the whole night.
b) Do ibaadah in the nights in the last odd nights in Ramadan and earn a reward of worshipping for 1000 months. If you do it for 10 years, it will be equivalent to 833 years.
c) Keep aside one hour everyday for self- development. Suppose you choose to memorize one dua everyday for one hour, by the end of the year, you can memorize 365 duas of the Sunnah of the Prophet (pbuh). If you want to learn Arabic for one hour everyday, you have 320 hours every year if you are 80% regular in your learning. Now, without wasting time, make a list of the things you would like to learn in the next three months, 6 months, 1 year and 2 years. These are called "short term goals" and "long term goals" in terms of the corporate world.

What are your most productive Islamic activities?

This is for a continuous reward (Sawaab-e-Jaariya).
Choose from the below activities or add your own skills and talents:

a) Teach someone any aspect of Islam, be it a dua, correcting hid wudhu or his recitation of the Qur'an and lo! He keeps on doing it properly and your account keeps on increasing.
b) Talk to a non- Muslim about Islam.
c) Be a volunteer for any social cause in helping people.
d) Intercede for a good cause and have a share in it. (Surah Nisaa:85) Spot an orphan/ widow and find out a sponsor if you cannot afford it yourself.
e) By now, you must be having a lot of ideas, erupting in your own mind. Note them down just now and remember us in your supplications.

Do this to save time.

a) Always carry a good book to read.
b) If you discuss, take something worthy.
c) Help your spouse in his/ her work.
d) Visit a hospital and meet the poor and sick.
e) Visit your relatives whom you have not met for a long time.
f) Take your family to orphanages.

A list of probable time wasters.

Check out which is applicable to you:
Sleeping more than average.
Gossiping with friends on useless topics.
Watching TV serials.
Reading useless books.
Having to wait for a long time at the bus stop.
Have a list of pending work.
Chatting on the internet on worthless topics.
Being addicted to computer games.
Free lectures due to absence of teacher in school.
"Remember, Allah has not created for idle sport the heavens and the earth and all that is between them."
How to get the best out of this life.

How many Lailatul Qadr have you missed out? The Qur’an declares:“What do you know what is Lailatul Qadr? Lailatul Qadr is better than 1000 months.”This Qur’anic verse gives us an idea or a short- cut in earning immeasurable sawab.That is, if you worship or do ibadah in the last 5 odd nights in the month of Ramadan, by the Grace of Allah, one of them would be Lailatul Qadr. In 10 years, it is 50 days, which is lesser than 2 months and if you get 10 Lailatul Qadr in your life. You get a reward of 10,000 months which is equal to 833 years. Now calculate how many Lailatul Qadr you have missed out enjoying the night playing carom, chatting and doing useless things. Henceforth, don’t miss out any Lailatul Qadr in your life inshAllah.

Source: http://www.successislam.com/timemanagement.html

காதலித்து பார்!

காதலித்து பார்! வைரமுத்து-உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...உலகம் அர்த்தப்படும்...ராத்திரியின் நீளம் விளங்கும்....உனக்கும் கவிதை வரும்...கையெழுத்து அழகாகும்.....தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...காதலித்துப்பார் !***தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்...காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்...வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய் உணர்வாய்...வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்காதலை கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!*** இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்...உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளே அம்புவிடும்...காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்...ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...தாகங்கள் சமுத்திரமாகும்...பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...காதலித்துப் பார்!*** சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே...அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...அதற்காகவேனும்...ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..அதற்காகவேனும்...வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

Six C's of Character - Yasir Fazaga