Search This Blog

Sunday, June 24, 2007

காதலித்து பார்!

காதலித்து பார்! வைரமுத்து-உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...உலகம் அர்த்தப்படும்...ராத்திரியின் நீளம் விளங்கும்....உனக்கும் கவிதை வரும்...கையெழுத்து அழகாகும்.....தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...காதலித்துப்பார் !***தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்...காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்...வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய் உணர்வாய்...வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்காதலை கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!*** இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்...உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளே அம்புவிடும்...காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்...ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...தாகங்கள் சமுத்திரமாகும்...பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...காதலித்துப் பார்!*** சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே...அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...அதற்காகவேனும்...ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..அதற்காகவேனும்...வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

Six C's of Character - Yasir Fazaga