Search This Blog

Sunday, April 23, 2006

சிறுபான்மை உதவி அறக்கட்டளை, கோவை

சிறுபான்மை உதவி அறக்கட்டளை, கோவை

வெஞ்சிறையில் அல்லல்படும் சகோதரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் துயர் துடைக்க நிதி உதவி கோரி விண்ணப்பம்
மேலும், அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். ( குர்ஆன் 76:8)
பேரன்பு மிக்க இஸ்லாமிய சகோதரர் சகோதரிகளுக்கு கோலையிலிருந்து சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பாக வரையும் விளக்க மடல்.அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)வல்லோன் அல்லாஹ்வின் பேரருள் பிரதேசம் எங்கும் நிலவட்டுமாக.! அவனுடைய சாந்தியும் சமாதானமும் அண்ணலார் பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அண்ணாரது உற்றார் உறவினர்கள் மீதும் சத்திய ஸஹாபாக்களின் மீதும் தீனை இம்மண்ணில் நிலைநாட்டிட வேண்டுனெ;று அயராது பாடுபடும் எல்லா நல்ல உள்ளங்களின் மீதும் நின்று நிலவட்டுமாக..! எட்டு ஆண்டுகளாக சிறைபட்டு முடங்கி கிடக்கும் நம் சகோதரர்களை மீட்டுவதற்குரிய பொருளாதாரத்தை இப்புனிதமிகு ரமளான் மாதத்தில் தாங்களின் துஅவையும் தான தர்மங்களையும் தந்திட வேண்டுமென்பதைக் கோரும் விளக்கமடல்
நிகழ்ந்தவை
தமிழக சூழ்நிலைகளைப் பற்றி தாங்கள் அனைவரும் நன்றாக அறிந்ததே. இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் வேரடி மண்ணோடு மண்ணாக ஆக்கிட வேண்டுமென அதிதீவிரமாக செயல்பட்டு வரும் சங்பரிவார் கும்பல்களின் அடாவடித்தனங்களும் அக்கிரமங்களும் எல்லை மீறி சென்றுவிட்டன. இக்கும்பல்களின் தலையாய அக்கிரமமாக இறை இல்லாமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக்கப்பட்டது. இக்கொடூர சம்பவம் இந்திய முஸ்லிம்களின் மனதை பெருமளவில் பாதிப்படையச் செய்தது. அதிலும் குறிப்பாக தமிழக முஸ்லிம்களின் மனதை அதிகமாகப் பாதிப்படையச் செய்தது மட்டுமின்றி வெகுண்டு எழச் செய்தது. காரணம் ஏனெனில் தொடர்ந்து சங்பரிவார் கும்பல்களின் தாக்குதலாக இஸ்லாமிய ஊழியர் ஜின்னா சாஹிப் அவர்களின் படுகொலையும் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் படுகொலையும் அங்கிங்கென அவ்வப்போது அப்பாவி முஸ்லிம்களின் மீது நிகழும் தாக்குதல்களும் சிறுசிறு கலவரங்களும் இதற்குரிய பரிகார நடவடிக்கை கிடைக்காதது மட்டுமின்றி தமிழக அரசின் பாரபட்ச போக்கினை கண்;ட நம் இளைஞர்கள் ஓர் அணியாக திரள்வதை தவிர்க்க இயலாhததாகி விட்டது. 1997 நவம்பர் மாத் 29ம் தேதி சங்பரிவார் கும்பல்களும் தமிழக காவல் துறையில் பவரும் இணைந்து கோலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திட்ட கோரத்;;;தாண்டவம் முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தது. இக்கயவர்கள் மூட்டிய அநீதி நெருப்பில் முஸ்லிம்களின் 1000 கோடி சொத்துக்கள் கருகின, 18 முஸ்லிம் இளைஞர்களை காக்கா குருவி போன்று சுட்டுப் பொசுக்கித் தள்ளியது தமிழக காவல் துறை. பயங்கரவாத திமிர்பிடித்த இஸ்ரேல் ராணுவம் கூட முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ரப்பர் குண்டுகளை பயன்படுத்துகின்றது. ஆனால் சொந்த நாட்டில் எம் சொந்த மண்ணில் எதிரிகளைச் சுட்டுக் கொல்வது போல் சுட்டுப் பொசுக்கியதைக் கண்டு பாதிப்படைந்த முஸ்லிம் இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அடிபட்பவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது குற்றுயிரும் கொலை உயிருமாக கிடந்த நம் சகோதரர்களின் மர்ம உறுப்புகள் வெட்டி எறியப்பட்ட ஈனத்தனமான செயல்களையும், அராஜகத்தால் அடிபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்கள் குற்றுயிரும் கொலை உயிருமாய் திரும்பியதையும், மருத்துவமனையில் சிக்கிய சடலங்களைக் கூட விட்டு வைக்காமல் மர்ம உறுப்பக்களை வெட்டி தீக்கிரையாக்கிய இக்கொடூர செயல்களைக் கண்டு மனித நாகரிகமே வெட்கப்படுமளவிற்கு வார்த்தைகளால் விவரித்திட முடியாத ஈனத்தனமான செயல்கள் நடந்தேரியது.
நடந்து முடிந்த இவ்வக்கிரமான வன்முறையை நியாய உணர்வுள்ள எவராலும் ஜீரணித்துக் கொள்ள இயலாது. அதே சமயம் இவ்வன்முறையை எதிர்கொள்ள இன்னொரு வன்முறை என்பதும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள இயலாது. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது. அதே சமயம் இந்த அக்கிரமத்திற்குரிய எதிர்கொள்ளலையும் தீர்வுகளையும் வழிகாட்டுதல்களையும் உரிய முறையில் விளக்கி வழிகாட்டிட வேண்டியது அறிஞர் பெருமக்கள் மற்றும் இயக்கத்தலைமைகளின் தார்மீக பொருப்பாகும். ஆனால் வெட்டி வேததாந்தம் பேசி வெறும் கண்துடைப்பு அறிக்கை வெளியிட்டு ஜால்சாப் செய்து இளைஞர்களை கோழைகளாக்கும் நிகழ்வுகள் ஒருபுறமும் இன்னொரு புறமோ ரத்தத்தைச் சூடேற்றும் வகையில் தீப்பொறி பறக்கும் அனல் பேச்சுக்களால் இளைஞர்களைத் தூண்டி உணர்ச்சி வசமாக்கிய மடத்தனமான செயல்கள். இங்கணம் நிலவி வந்த தமிழக சூழ்நிலைகளால் நம் இஞைர்களின் ஆற்றல்கள், உழைப்பு என அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் பயனற்றப்போனது. செல்லரித்துப் போன அந்நிலையினை மீளாய்வு செய்து மீட்டிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் 1997 நவம்பர் 29 கலவரத்தின் எதிர்வினையாக இந்தியாவையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதை வைத்தவர் யார்..? இதைச் செய்தவர்கள் யார்..? என்பதையெல்லாம் முறையாக விசாரிக்கத்தவறிய தமிழக சிறப்பு புலனாய்வுத் துறை வீட்டில் படுத்துக் கொண்டிருந்தவர்களை, தெருவோரத்தில் தூங்கியவர்களையெல்லாம் கொத்தாகப் பற்றி வாரி வழித்து சகட்டுமேனிக்கு அனைவரையும் சிறையிpல் அடைத்தது. பலரை இப்போது விட்டு வீடுவோம் என விசாரனைக்கு அழைத்துச் சென்றவர்களை ஆண்டுகள் எட்டு கடந்து போன பிறகும்; விட்டபாடில்லை. இங்கணம் அவ்வழக்கில் 166 நபர்கள் உள்ளனர். 8 ஆண்டுகளாக சிறைவாழ்வை கழித்து வரும் இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இவர்களது இளமைக்காலம் முழுவதும் சிறையிலேயே கழிந்து விட்டது. வெளி உலகமே என்னவென தெரியாத சிறுவர்களும், இன்றோ நாளையோ என மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வயது முதிர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்கோர் இச்சிறைப்பட்டோரில் உள்ளனர். இந்நீண்ட சிறைவாசத்தில் உரிய சிகிச்சையின்றி சிறையிலே இறந்து போன முதியோர் தஸ்தகீர் போன்றோர் நிலை விடுதலையாவதற்குள் இன்னும் எத்தனை பேருக்கு என்பது நாம் கொள்ளும் மிகப்பெரிய கவலையாகும்.
தலைவன் இல்லாத குடும்பம்.....மகனைப் பிரிந்த பெற்றோர்கள்வயதான காலத்தில் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் தங்களது எஞ்சிய நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கும் சிறைப்பட்டவர்களின் வீட்டிலுள்ளவர்களுக்கு திடீரென ஏற்படும் உடல் நலக் குறைவுகளை, மரணம், திருமண வயதை அடைந்தும் மணமாகாகமல் காத்திருக்கும் சிறைப்பட்ட சகோதரர்களின் குடும்பத்துப் பெண்கள், தொடக்கக் கல்வி பாட சாலை பார்த்திடாத இவர்களின் குழந்தைகள், பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு குடும்ப பாரத்தை சுமந்து வேலைக்கு அனுப்பப்பட்ட சிறுவர்கள், ஹிஜாபை பேணவேண்டிய குடுமம்பப் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, கவலையினால் நிரந்தர நோயாளியாகிப் போன தாய் தந்தையர்களை இவர்களின் தொடர்சிறை வாசத்தைப் போல இவர்களின் குடும்பங்களின் துன்பங்களும் தொடர்பட்டியலாகவே உள்ளன
ஊவுஆ ஓர் அறிமுகம்இவ்வாறெல்லாம் துன்பங்களும் துயரங்களும் உள்ள இவர்களது வாழ்வுக்கு எந்த நிவாரணமும் உதவியும் செய்ய முன்வராத நிலை, எந்தவொரு அறிஞர்களோ, இயக்கங்களோ முயற்;;சி எடுக்காத நிலை கண்டு வேதiயிலும் வேதனையாக சிறைப்டடோரும் அவர்தம் குடும்பத்தாரும் செய்வதறியாது நிற்கையில் அல்லாஹ்வின் பேருதவியால் நல்ல மனம் படைத்த சிலரின் ஆலோசனையின் பேரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களே ஒன்றிணைந்து 2001 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவ்வறக்கட்டளை நிறுவப்பட்டன. குடும்பங்களில் நிலவிடும் பிரச்சினைகளை முழுவதும் தீர்க்க முடியாவிட்டாலும் முடிந்த அளவிற்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறுசிறு உதவிகளைச் செய்து வருகிறோம். (இந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பல அமைப்புகள் குரல் கொடுத்து வருவதும் பல அறிஞர் பெருமக்களின் ஆதரவுக் குரல்களும் ஓரிரு அமைப்புக்களின் சிறுசிறு பொருளாதார உதவியும் எங்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது)
எம்பணிகளில் சிலசிறைப்பட்டோரின் குடும்பத்தாருக்கு திருமண உதவி, கல்விக்காக என்று 40 குடும்பங்களுக்கும், மருத்துவ செலவுகள் 20 குடும்பங்களுக்கும், சில குடும்பப் பெண்களுக்கு தையல் மெஷின் போன்ற சுய தொழில் முனைவுப் பொருட்கள் வழங்குதல் என உதவிப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஹிஜாப் பேணவேண்டிய பெண்கள் வெளியிடங்களில் வேலைக்குச் சென்று வருவதை தடுக்க ஊவுஆ ன் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு வேலையும் கொடுத்து வருகின்றோம். இக்குழவின் சார்பாக குறைந்தது 40 குடும்பங்களுக்கு மாதா மாதம் 500 ரூபாய் குடும்ப நல உதவியாக அனுப்பப்படுகிறது. போதிய முதலீடு உதவிகளும் இல்லாததால் இப்பணி குறைவாகவே நடைவெற்று வருகின்றது. தங்களைப் போன்ற நல் உள்ளங்கள் முன்வந்தால் இப்பணியில் குடும்பங்களின் உதவித்தொகை அதிகமாகவும் கொடுக்கலாம், அன்னிய ஆடவர்கள் மத்தியில் வேலை செய்து பிழைக்கவேண்டிய அவல நிலையினைப் போக்கி சகோதரிகள் ஹிஜாப் முறையை பேணி சம்பாதிக்க உரியவகையில் எம் சமூக மக்களுக்கு உதவலாம்.
கண்ணீர் கருத்தரங்கம், மனித உரிமை கருத்தரங்கம், நீதி கோரும் கருத்தரங்கம் போன்ற கருத்தரங்கங்கள் பல சமுதாய தலைவர்களின் முன்னிலையில் நடத்தியுள்ளோம். தமிழக முஸ்லிம்களிடையே சிறைபட்டோரின் விடுதலைக்காக விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கண்ட நிகழ்ச்சிகளும் ஆர்ப்பாட்டங்களும்; நடத்தியுள்ளோம். என் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற சமூக ஆர்வலர்களில் சிலர் மனித உரிமை இயக்கத் தலைவர் கண்ணபிரான், முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் முஆ காதர்மொய்தீன் ஆPஇ மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், ஹாமித் பக்ரி, ஆபுமு நிஜாமுதீன் நுஒ ஆடுயு, வுதுஆ சலாவுதீன் ரியாஜி, தேசிய லீக் பஷீர் அஹமது, ஆ மார்கஸ் போன்றோர்.வழக்குகள் பொறுத்தவரையில் கோட்டை அமீர், போலீஸ்காரர் செல்வராஜ் கொலைவழக்குகள் போன்ற சில வழக்குகள் அல்லாஹ்வின் உதவியால் தீர்ப்பாகி விடுதலையும் கிடைத்து விட்டது. இன்னும் எம் முயற்சிகள் தொடர்கின்றன, பல வழக்குகள் உயரிநீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தீர்ப்பின் தருணத்தைக் காத்துக் கொண்டிருக்கின்றது. அது போல கோவை குண்டுவெடிப்பு விசாரனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில வழக்குகள் முடிவடையும் நிலையில் உள்ளன. அரசு நியமித்துக் கொடுத்த போதிய அனுபவமற்ற வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கு விசாரனை ஒருவழியாக முடிவடையப் போகின்றன். இன்னும் சில மாதங்களில் இறுதிக்கட்ட விசாரனை நடக்கும். அச்சமயம் திறமையான சீனியர் வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு உண்டான பொருளாதாரம் கிடைக்கப் பெற்றால் வழக்கின் வெற்றிக்கு வாய்ப்பாக இருக்கும். அல்லாஹ்வின் கிருபையால் இவ்வழக்கிலிருந்து நிறைள சகோதரர்களை மீட்டு விடலாம் எந்ற நம்பிக்கை நிறைய உள்ளன.
எதிர்காலத் திட்டம்ஆனால் இன்னும் நடத்திட வேண்டிய வழக்குகளும் ஏராளம்..!ஏராளம்..! மேலும் வறுமையில் வாடும் குடும்பத்தின் வாட்டத்தைப் போக்குவதும் மிகவும் இன்றியமையாததாக உள்ளன. சட்ட உதவிகள் செய்வதற்குரிய பொருளாதாரதம் இல்லாமையால் நம் சகோதரர்கள் நீண்ட காலம் சிறையில் வாடுகின்றனர் என்பதே நிஜம். முழு முயற்சி செய்து விடுதலையாகவில்லையெனில் அதைப்பற்;றி கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அல்லாஹ்வின் நாட்டமென பொறுமை காப்போம். உரிய பொருளாதாரம் கிடைக்காமையினால் சட்ட ரீதியான உதவிகள் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கின்றோம். பல வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட நம் சகோதரர்கள் பொருளாதாரமின்மையால் போதிய அனுபவமற்ற வழக்கிறிஞர்களை நியமித்து விசாரனை மேற்கொண்டதால் இன்று தமிழக சிறையில் 75 க்கும் மேற்பட்ட வெள்ளை உடை தரித்த ஆயள் தண்டனை சிறைவாசிகளாக உலா வருகின்றனர். அல்லாஹ்வின் கிருபையால் உரிய பொருளாதாரம் கிடைக்கப் பெற்றால் முழு வீச்சுடன் முயற்சிகளை மேற்கொள்ளலாம். உச்ச நீதி மன்றம் வரை உடனுக்குடன் செல்ல பொருளாதாரமே தடையாக உள்ளன.கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தன்டனை பெறும் சகோதரருக்கு மேல்முறையீடு செய்து விசாரிப்பதற்கு கணிசமான பொருளாதாரம் தேவைப்படும். கோவை குண்டு வெடிப்பு அல்லாத வேறு பல வழக்குகளில் தண்டனைப் பெற்ற சகோதரர்களுக்கு மேல் முறையீடு செய்வதற்கே லட்சக்கணக்கில் பொருளாதாரம் தேவைப்படுகின்றது. இவ்வாறு பல வழிகளில் பொருளாதாரத்தின் அவசியம் மிகமிக இன்றியமையாததாக உள்ளன. கோவை குண்டு வெடிப்பு வழக்கிலுள்ள 166 நபர்களில் 40 நபர்களுக்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகமும், 8 நபர்களுக்கு கேரள மதானி சகாய கமிட்டியும், 115 நபர்களுக்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளையும் பொறுப்பெடுத்து கவனித்து வருகின்றது. ஊரிய பொருளாதாரம் கிடைக்கப் பெற்றால் தமிழகத்தின் ஏனைய சிறைகளில் சிக்குண்டு கிடக்கும் சகோதரர்களுக்கும் உதவிகள் செய்து அவர்களின் வழக்குகளையும் கவனிக்கும் என இவ்வறக்கட்டளை தாங்களின் முன் வாக்களிக்கின்றது. இனி வரும் காலங்களிலும் நம் சமூகத்தின் மீது ஏதாவது கொடுமைகள் இழைக்கப்பட்டாலும், பொய் வழக்குகள் போடப்பட்டாலும் அதனை எதிர்கொள்ள சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்யும், இன்ஷா அல்லாஹ்.
வேண்டுகோள்
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் , ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதித்துறையின் தாரக மந்திரம். 8 ஆண்டுகள் நெருங்கியும் யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் எம் சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணையைக் கூட மறுத்து விடுகின்றனர். சங் பரிவாரைச் சார்ந்த நாடறிந்த குற்றவாளிகள், நாட்டில் உலா வருகின்றனர். சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவால், குற்றம் செய்துள்ளார் என அறிவிக்கப்பட்டும் கூட சங்கராச்சாரியார் பிணையில் விடப்படுகின்றார். ஆனால் நம் சகோதரர்களுக்கு நீண்ட காலமாக பிணை தராமல் வெஞ்சிறையில் அடைத்து வைக்கப்படும் கொடுமை தமிழகத்தில் நடந்து வருகின்றது. இந்த அநீதிக்கு எதிராக ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும். நமக்கென்ன என இருப்பது நல்ல முஸ்லீம்களின் பண்பல்ல.
அண்ணல் பெருமானார் (ஸல்) கூறியிருக்கின்றார்கள்:
அநீதிக்குள்ளாக்கப்படுபவனை பார்த்துக் கொண்டு தடுக்காமல் விட்டுவிடுபவன் அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுக் கொள்வான். ( தபரானி)
அநீதிகளுக்கு ஆட்படுகின்ற ஒருவனுடன் அவன் அந்த அநீதியிலிருந்து விடுபடும் வரை துணை நிற்பவனின் பாதங்களை சிராத் பாலத்தில் அவன் நடக்கும் போது அல்லாஹ் பலப்படுத்தி வைக்கின்றான் ( அஸ் பஹானி)
இவர்களுக்காக குரல் கொடுப்பது, போராடுவது, பொருளாதார உதவிகள் செய்திட வேண்டியது முஸ்லீம்களாகிய நம் மீது கடமையாகும்.
ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமின் சகோதரராவான்;. அவன் அடுத்தவனை அமுக்கவோ, அடுத்தவனுடைய உரிமைகளை பறிக்கவோ மாட்டான். சகோதர முஸ்லிமுடைய தேவையை நிறைவேற்றுபவனுக்கு அல்லாஹ் உதவி செய்வான். சகோதர முஸ்லிமின் ஒரு துன்பத்தை அகற்றுபவனுடைய துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் மறுமை நாளில் அகற்றுவான். முஸ்லிம் சகோதரனின் குறையை மறைப்பவனின் குறையை அல்லாஹ் மறுமை நாளில் மறைத்து அல்லாஹ் அருள் புரிவான் ( முஸ்லிம்)
மேலும், அவ(இறைவ)ன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். ( குர்ஆன் 76:8)
முஸ்லிம்களிடம் காணப்பட வேண்டிய பரஸ்பர அன்பு, இரக்கம், தாராளத்தன்மை ஆகியவை ஒரு உடலுக்கு உப்பாகும். இந்த உடலில் ஒரு சில பகுதிகளுக்கு வேதனை ஏற்பட்டு விட்டால் உடலின் ஏனைய பகுதிகளும் உறக்கமின்மை, காய்ச்சல் ஆகியவற்றிற்கு இலக்காகி விடுகின்றன. ( புஹாரி)
இங்கணம் பல்வேறு தேவையுடையோராகவும் குறிப்பாக வாழ்வின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற இயலாத வகையில் முடங்கிக் கிடக்கும் இவர்கள் உங்களின் தான தர்மங்களுக்கு தகுதியானவர்கள். ஜகாத் பெறத் தகுதியுடையோரில் இச் சிறைப்பட்டோரும் ஒரு பிரிவினர். இவர்களுக்கு உதவுவது நம் மீது கடமை என்பதை மேற்குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீத்கள் மூலம் நாம் உணர முடியும். நன்மைகளை வாரி வழங்கும் ரமலான் மாதத்தில் உங்களின் தான தர்மங்களை இவர்களுக்கு வாரி வழங்குவீர். அல்லாஹ்வின் தூதர் இம் மாதத்தை அடைந்து விட்டால் வேகமாக வீசக் கூடிய காற்றை விட அதிகமாக வாரி வழங்குவார்கள். அண்ணலாரின் அடியொற்றி வாழும் நாமும் இவ்வழிமுறையை பின்பற்றி சிறைபட்டோரின் நலனுக்கு வாரி வழங்கி மறுமையில் நற்பேற்றினை அடைவோமாக. இப்தார் நேரத்தில் கேட்கும் துஆவிலும் இவர்களின் விடுதலைக்காகவும், இதற்காக பாடுபடும் நல்ல உள்ளங்களுக்காகவும் பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவரி
Charitable Trust for Minorities
Reg No : 882/2001
Rahim Plastic House
Ganiyar Nagar
Saramedu, Karumpukkadai,
Coimbatore – 8
Tamilnadu, India

Phone: ++91422 2307673 / ++ 91422 5546584 / ++ 91 94436 54473


Website : www.ctmcoimbatore.com
Email : kovaithangappa@yahoo.com

No comments:

Six C's of Character - Yasir Fazaga