Search This Blog

Sunday, April 23, 2006

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்)
நபி ஸல் அவர்கள் கி.பி.571ல் மக்கா நகரில் அப்துல்லாஹ், மீனா என்ற தம்பதிக்கு பிறந்தார்கள். இயற்பெயர் முஹம்மத். பிறப்பதற்கு முன் தந்தையையும், பிறந்த று வருடங்களில் தாயையும் இழந்து அனாதையாக பாட்டனார் அப்துல் முத்தலீப் மற்றும் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.
மேலும் தமது இருபத்தி ஐந்தாவது வயதில் அன்னை கதீஜா (ரலி) என்ற விதவையை விவாகம் புரிந்தார்கள். கதீஜா (ரலி) மூலமாக நான்கு பெண் குழந்தைகளும் மூன்று ண் குழந்தைகளும் பிறந்தன. சிறு பிராயத்திலேயே மூன்று ண் குழந்தைகளும் இறந்து விட்டன. மேலும் வாலிப பருவத்திலேயே மக்களிடம் நம்பிக்கைக்குரியவர், நாணயமானவர், உண்மையாளர் என்ற நன்மதிப்பை பெற்றிருந்தார்கள்.
மேலும் சிரியா போன்ற நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தார்கள். அதன் மூலம் ஏழை எளியோர், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்தார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை மனம் நோகாமல் வரவேற்று உபசரிப்பார்கள். அவர்களின் முப்பத்தைந்தாவது வயதில் புனித க•பா பள்ளிவாசலை சீரமைப்பதில் பங்கு கொண்டார்கள். மக்காவில் பிறந்து வளர்ந்த்தாலும் அந்த மண்ணின் மூடப்பழக்கங்கள் அவர்கள் மீது படியவில்லை. மக்களின் தீய நிலையைக் கண்டு அடிக்கடி வருந்துவார்கள். மக்கள் நல்வழியில் வாழவேண்டும் என்று விரும்புவார்கள். அதற்காக மக்கா அருகிலுள்ள ஒரு மலையிலுள்ள ஹிரா என்னும் குகையில் பல நாட்கள் தங்கி தனிமையில் சிந்திக்கலானார்கள். மக்களை சத்தியப் பாதையில் செல்லுமாறு அழைக்கும் பணி இவர்களது நாற்பதாவது வயதில் தொடங்கியது. அதாவது கி.பி.610ல் வல்ல இறைவன் அவர்களைத் தனது நபியாக - தூதராக நியமித்தான்.
அவர்களுக்குத் தனது வழிகாட்டுதலாகிய திருகுர்னையும் அருளினான். மக்காவில் அழைப்புப் பணி மேற்கொண்ட பதிமூன்று வருடங்களில் ரம்ப மூன்று வருடங்கள் நெருங்கிய உறவினர்கள் நண்பர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். அவர்களின் ரம்பகால அழைப்புப் பணியின் மூலமாக அபூபக்கர் (ரலி), பிலால் (ரலி), ஜைது பின் ஹாரிஸா (ரலி) போன்ற தோழர்கள் கிடைக்கலாயினர். பிறகு பிரச்சார பணியை பகிரங்கப்படுத்தினார்கள்.
அவர்களுக்கும் அவர்களின் தோழர்களுக்கும் எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைகளையும், துன்பங்களையும் சகித்தார்கள். இன்னல்கள் அதிகரித்து அவர்களை கொலை செய்யவும் மக்காவாசிகள் திட்டம் தீட்டியபோது இறைவனின் ணைப்படி மக்காவிலிருந்து முந்நூறு மைல்களுக்கு வடக்கே உள்ள மதீனா நகருக்கு சென்று அங்கு சுமார் 10ண்டுகள் சத்திய அழைப்புப் பணி செய்தார்கள். மேலும் அங்கு இஸ்லாமிய அரசையும் நிறுவி மக்களிடம் நீதத்தோடு ட்சி புரிந்தார்கள். மனித வாழ்வின் ன்மீக, உலகாயத்துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டார்கள். மக்கள் அனைவரையும் சிலை வணக்கத்தின்றும் விடுவித்து ஒரே இறைவனை வணங்கும் உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள். சூது, மது, மாது கியவற்றில் மூழ்கிக் கிடந்த அரேபிய மக்களை அவற்றினின்றும் நீக்கிப் பண்பும், இறையச்சமும் உடையோராய் மாற்றினார்கள். சட்டத்தையும் அரசையும் விரும்பாத அவர்களின் வாழ்வை ஒழுங்கும் கட்டுப்பாடும் உடைய வாழ்க்கையாக மாற்றினார்கள்.
இத்தகைய முழுமையான சமூக மாற்றத்தை உலக வரலாறு அதற்கு முன்பும் கண்டதில்லை! பின்பும் கண்டதில்லை!. அம்மாமனிதருடைய தனிப்பட்ட வாழ்வு, சமூக வாழ்வு, அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் மிகவும் நுணுக்கமாக அவர்களுடைய தோழர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அணுவளவும் மாற்றமின்றி இன்றும் நமக்கு கிடைக்கின்றன. வாழ்வில் பல புரட்சிகள் கண்ட அண்ணல் முஹம்மது(ஸல்) அவர்கள் தமது அறுபத்தி மூன்றாவது வயதில் கி.பி.632வது ண்டில் மரணம் அடைந்தார்கள். அவர்கள் காட்டிய வழி இன்று உலகில் நூற்றிஐம்பது கோடிக்கும் அதிகமான மக்களால் பின்பற்றப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டியதாகும்.
இஸ்லாம் பற்றி மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்:

No comments:

Six C's of Character - Yasir Fazaga